உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப் பட்டது. இதில் 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. 7-வது மற்றும் இறுதிகட்டமாக 40 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடை பெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.
மணிப்பூரில் மொத்தம் உள்ள 60-ல் 38 தொகுதிகளில் முதல்கட்டமாக கடந்த 4-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 2-வது மற்றும் இறுதிகட்டமாக மீதமுள்ள 22 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
மணிப்பூர் சட்டப் பேரவைக்கு இன்று முதல்கட்டமாக 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அங்கு காலை அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் சண்டல் மாவட்டத்தில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது.
தொடர்ந்து 7.42 மணியளவில் இந்தியா - மியான்மர் எல்லையில் மீண்டும் நில நடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி உள்ளது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுகத்திதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
மணிப்பூர் சட்டப் பேரவைக்கு இன்று முதல்கட்டமாக 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், 38 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்குத் துவங்கியது. மீதமுள்ள 22 தொகுதிகளுக்கு வருகின்ற மார்ச் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடக்கும் தொகுதிகளில், 1,643 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மணிப்பூர் சட்டசபை தேர்தல் மார்ச் 4-ம் மற்றும் 8-ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதில் போட்டியிடும் பா.ஜ.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று மணிப்பூர் செல்ல உள்ளார்.
பிரதமரின் இந்த பயணத்துக்கு அங்குள்ள புரட்சி அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பிரதமரின் வருகையை எதிர்த்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து உள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி டெல்லியில் இன்று அறிவித்தார்.
மணிப்பூரின் இரும்புப் பெண் என வர்ணிக்கப்படும் இரோம் சர்மிளா 2000-ம் ஆண்டு முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்க்கொண்டார். அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிர் வாழ வலுக்கட்டாயமாக குழாய் மூலம் மூக்கு வழியாக திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அறையே சிறைச்சாலை போல் ஆகிவிட்டது.
மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஐரோம் ஷர்மிளா 2000-ம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
அசாம் ரைபிள்ஸ் படையினரால் 2000-ம் ஆண்டு, 10 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ஷர்மிளா தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். தனது 27-வது வயதில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதில் இருந்து, துளிநீர்கூட பருகாமல் கடந்த 14 ஆண்டுகளாக பட்டினி கிடந்து போராடி வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.