இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என்ற செய்தி உண்மை இல்லை என்றும், இறப்பை பதிவு செய்யவதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பல சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதேபோல, பான் கார்டு பெறுவதற்கு, வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கி உள்ளது.
இந்நிலையில், இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாகவும். வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என நேற்று ஊடங்களில் செய்திகள் வெளியாகின
ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது என வைகோ தெரிவித்துள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
மீத்தேன் எரிவாயு திட்டத்தின் ஆபத்துக்களை உணர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் விழிப்புணர்வு ஊட்டியதால் விவசாயிகள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மீத்தேன் திட்டத்திற்கான அனுமதியை இரத்து செய்வதாக 2015 அக்டோபரில் இல் தமிழக அரசு அறிவித்தது.
சமூக நலத்திட்டங்களில் ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:-
தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு மறுத்து விட்டதாக சட்டப்சபையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இரண்டாவது நாளான இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து அமைச்சர்களுக்குள் ஒற்றுமை இல்லையா? என்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்வு செய்த இடத்தை மத்திய அரசு மறுத்துவிட்டது.
புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தை மத்திய - மாநில அரசுகள் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதைக்குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டதாவது:
உலகம் முழுவதும் புகையிலைப் பொருட்களின் விற்பனையால் இளைஞர்களும், அப்பாவி பொதுமக்களும் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை குறுகிய காலத்திலேயே இழக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில் புகையிலை சார்ந்த நோய்களினால் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்தியாவில் 12,000 விவசாயிகள் ஆண்டுக்கு தற்கொலை செய்து கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
விவசாயிகள் தற்கொலை தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தன்னார்வ அமைப்பு தாக்கல்செய்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.
விவசாயிகள் தற்கொலை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எழுப்பியுள்ளது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது .
இதற்கு பதிலளித்த மத்திய அரசு, விவசாயிகள் மரணத்துக்குத் தீர்வு காண, நிதி ஆயோக்கிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' என்று பதில் அளித்தது. அதற்கு உச்சநீதிமன்றம், 'எத்தனை பணியைத்தான் நிதி ஆயோக்கிடம் வழங்குவீர்கள்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அகில இந்திய மகிளா காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்று வருகிறது.
சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்த மகிளா காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நக்மா கூறியதாவது:
விவசாயிகள் பிரச்னைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மாநில அரசை கைகாட்டுவது தவறு. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது ரூ.77.200 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். ஆனால் இப்பொழுது உள்ள மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படவில்லை என குற்றம் சாட்டினார்.
கங்கையை சுத்தப்படுத்த ரூ.2 ஆயிரத்து 154 கோடியே 28 லட்சம் ஒதுக்கீடு.
கழிவுநீர், குப்பை போன்றவற்றால் மாசடைந்துள்ள கங்கை நதியை சுத்தப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கங்கையை தூய்மைப்படுத்துவதற்காக மத்திய அரசு தேசிய திட்ட அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.
கங்கையை சுத்தப்படுத்தும் 26 திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 154 கோடியே 28 லட்சம் ஒதுக்கீடு செய்து இந்த அமைப்பு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வழிமுறையை வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
விவசாயகளின் தற்கொலைக்கு வழங்கப்படும் இழப்பீட்டை முறைப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
மத்திய அரசு தமிழக அரசியலின் உள் விவகாரங்களில் தலையிடாது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து டெல்லையில் இன்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:- தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பம் அதிமுகவின் உள்கட்சி விவகாரம். இதில் மத்திய அரசு தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. இப்பிரச்சனையானது மாநில விவகாரத்தின் கீழ் வருகிறது. இதில் ஏன் மத்திய அரசு தலையிட வேண்டும். அதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது. அதிமுகவில் நிலவும் பிரச்சனையை அதன் எம்எல் ஏக்கள் தான் தீர்க்க முடியும் என்றார்.
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூசன், பத்மபூசன் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2016-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசால் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் பின்வருமாறு:-
காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் நீர் இருப்பு, நீர்வரத்து ஆகியவை குறித்த உண்மை நிலவரத்தை கண்டறிய நிபுணர்கள் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அத்துடன் அந்த குழு 17-ம் தேதிக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
ரகுராம் ராஜனின் மூன்றாண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிப்பாரா? இல்லையா? என்று விவாதங்கள் நடைப்பெற்றன. இதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு ரகுராம்ராஜன் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் தாம் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிக்க விரும்ப வில்லை. திரும்ப அமெரிக்காவுக்கே செல்ல இருக்கிறேன் என்று எழுதியுள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கடல் சார்ந்த திட்டங்களுக்காக ரூ.90,000 கோடி முதலீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
காணொளியில் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது நிதின் கட்கரி இதைத் தெரிவித்தார்.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி சதவீதம் சற்று குறைந்திருக்கிறது.
கடந்த வருடம் மொத்த 97.32 சதவீதமாக இருந்தது.
இந்த வருடம் மொத்த தேர்ச்சி சதவீதம் 96.21 ஆகும்.
மாணவியர் 96.36 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பெற்றுள்ளனர்.
மாணவர்கள் 96.11 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவீதத்தில் திருவனந்தபுரம் முதலிடத்தினை பிடித்துள்ளது அதன் சதவீதம் 99.87.
99.69 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தை சென்னை பெற்றுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. அதனை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பேரணி நடத்தி வருகின்றன.
இந்நிலையில் மத்திய அரசு பொதுமக்களுக்கா வினாடி-வினா போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5 நிமிடங்களில் 20 கேள்விகளுக்கு கேட்கப்படும் அதற்க்கு சரியாக பதில் அளிப்போருக்கு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வெற்றி சான்றிதழ் பெறும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.