தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி அரசும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ததை தொடர்ந்து தற்போது புதுச்சேரி அரசும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.  

Last Updated : Apr 3, 2018, 12:02 PM IST
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி அரசும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!  title=

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. 

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். 

இதையடுத்து, உச்சநீதிமன்றம் இந்த நீதிமன்றம் அவமதிப்பு வழக்கை வருகின்ற ஏப்ரல் 9-ம் தேதி விசாரிக்க உள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில்,  மத்திய அரசின் 3 மாத கால அவகாச மனுவையும் உச்சநீதிமன்றம் ஏற்றது. இந்த மனுவை தமிழகம் தாக்கல் செய்த மனுவான நீதிமன்ற அவமதிப்பு மனுவுடன் சேர்த்து வருகின்ற 9-ம் தேதி விசாரிக்க உள்ளதாக தெரிவித்திருந்தது. 

தற்போது, காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ததை தொடர்ந்து தற்போது புதுச்சேரி அரசும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

Trending News