#CauveryIssue: மே 3-ஆம் தேதிக்குள் வரைவு திட்டம் தாக்கல் செய்ய உத்தரவு!

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வரும் மே மாதம் 3-ஆம் தேதிக்குள் வரைவு திட்டத்தினை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது!

Last Updated : Apr 9, 2018, 01:17 PM IST
#CauveryIssue: மே 3-ஆம் தேதிக்குள் வரைவு திட்டம் தாக்கல் செய்ய உத்தரவு! title=

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வரும் மே மாதம் 3-ஆம் தேதிக்குள் வரைவு திட்டத்தினை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது!

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. 

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். இதையடுத்து, இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, வரும் மே மாதம் 3-ஆம் தேதிக்குள் வரைவு திட்டத்தினை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது. மேலும் அடுத்தக்கட்ட விசாரணையினை வரும் மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது!

Trending News