தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நாம் தமிழர் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் நவீன் எபிராஜ் அனுமதி சீட்டும் இல்லாமல் ஜல்லிகற்களை கொண்டு வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பட்டாபிராமில் திருமணத்திற்கு பேனர் வைத்த விவகாரத்தில், அதனை அகற்றச் சென்ற பெண் உதவி ஆய்வாளர், திருமண வீட்டாரை தகாத வார்த்தையில் திட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தஞ்சம் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் பயணிகள் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான அணுமின் நிலையம் இயங்கி வருகின்றது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
ON- duty-யில் இருந்தாலும் duty-யில் இருந்தாலும் போலீஸ்காரர்கள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்த திருவாரூர் நகர சட்டஒழுங்கு காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்தது தீர்ப்பு.
சுங்குவார்சத்திரம் பகுதியில் போலீஸாரின் கண் முன்னே இளைஞரிடம் செல்போன் பறித்துக்கொண்டு தப்பியோடிய இரு வாலிபர்களை சினிமா பாணியில் துடித்திப்பிடித்து போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
கோவை கார் வெடிகுண்டு விபத்து தொடர்பாக மதுரை ஹாஜிமார் தெரு பகுதியில் வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரின் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Madras HC Direction To Police: பொதுமக்கள் தொடர்ந்து ஏமாந்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிக வட்டி கொடுக்கும் மோசடி தொடர்பாக போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர், விபத்து வழக்கை விசாரிக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு! கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியில் கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.