நாடு முழுவதும் உள்ள மக்கள் உகாதி என்னும் புத்தாண்டு தொடக்கத்தை கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி 46 ஆண்டுகளுக்குப் புதிதாக மாற்றப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் தனியார் நாளிதழின் பவள விழாவில் சிறப்பு விருந்தினராக இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். அதன் பிறகு பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதி, தனது கொள்ளுப்பேரன் திருமணம் நிகழ்ச்சியில் இன்று கலந்துக் கொண்டார். இதனால் கோபாலபுரம் இல்லமே மகிழ்ச்சியில் களை கட்டியது.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைபாடு ஏற்பட்டதால் ஒய்வு பெற்று வந்தார். கட்சிக்காரர்கள் சந்திப்பதும் மற்றும் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் மனோ ரஞ்சிதுக்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்சிதாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயாதார்த்தம் நடைபெற்றது. இன்று திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று இரவு முரசொலி பவள விழா கண்காட்சியின் அரங்கை பார்வையிட்டு நெகிழ்ந்தார். உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டாக காலமாக கருணாநிதி அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி முரசொலி மாறன் பிறந்த நாள் அன்று முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்தார். தற்போது உடல்நலம் தேறிய நிலையில் நேற்று இரவு முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியை வரவேற்று அழைத்து சென்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளுப் பேரனை கொஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். இருப்பினும் அரசியல் தலைவர்களை சந்திப்பது, திமுக நிகழ்ச்சிகள் தொடர்பாக நிர்வாகிகள் சந்திப்பது என அவ்வப்போது வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.
தற்போது தனது கொள்ளுப் பேரனுடன் கருணாநிதி கொஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வதந்திகள் உண்மை இல்லை என திமுக மூத்த தலைவர் டிஆர் பாலு கூறியுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார்.
கடந்த சில மாதங்களாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை இவரை சந்திக்கிறார்.
2014-ம் ஆண்டு அருள்நிதி திருமணத்தின் போது கருணாநிதியை வைகோ நேரில் சந்தித்தார். அதற்குப் பிறகு, சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து இருவரும் நேரில் சந்திக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொண்டையில் செயற்கை உணவு குழாய் மாற்றப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த சிகிச்சை முடிவடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க, தொண்டையில் துளையிட்டு, 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை அளிக்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டப்பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இன்று சட்டசபையில் திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் சட்டப்பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதி வேண்டும் என்று கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா மற்றும் 60 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினர் பணியை கவுரவிக்கும் வகையில் சட்டப்பேரவை வைர விழாவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
விழா மேடை தமிழக சட்டப்பேரவை வடிவில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவுக்கு, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். முதன்மை செயலாளர் துரைமுருகன் அனைவரையும் வரவேற்றார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சென்னை கோபலபுரத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியும் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதனிடையே, திமுக தலைவருக்காக தான் எழுதிய பிறந்தநாள் கவிதையை தனது பேஸ்புக் பக்கத்தில் கனிமொழி வெளியிட்டு இருந்தார்.
pic.twitter.com/jCNbfXVtkX
திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது இலத்தில் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 94-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் அவரை சந்தித்தார்.
கருணாநிதி பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், கேரள ஆளுநர் சதாசிவம், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.