அண்டை நாடான மியான்மரில் நிலநடுக்கம் 5.5 ரிக்டர்

Last Updated : Aug 23, 2016, 12:27 PM IST
அண்டை நாடான மியான்மரில் நிலநடுக்கம் 5.5 ரிக்டர் title=

இந்தியாவின் அண்டை நாடான மியான்மர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட சேதம் குறித்த இதுவரை தகவல் ஏதும் கிடைக்கவில்லை. 

இங்கு காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியுடன் வீட்டை விட்டு வெளியேறினர். பலர் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சில இடங்களில் போக்குவரத்து ஏற்பட்டது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.5 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. மியான்மர் மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் நமது நாட்டிம் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும மணிப்பூர், நாகாலந்து பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

Trending News