வேட்பாளர் ஒருவர் பசு வளர்ப்பை பின்பற்றவில்லையெனில் தேர்தல் ஆணையம் அவருடைய வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய பிரதேச சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலை முதலே திமுக முன்னணியில் இருந்து வருகிறது. பல தொகுதிகளில் பல நட்சத்திர வேட்பாளர்கள் பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள திராவிட முன்னேற்ற கழக தலைமையகத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வெற்றிக் கொண்டாட்டங்களைத் தடுக்கத் தவறியதற்காக தமிழக காவல் ஆய்வாளர் ஒருவர் இன்று சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் வெற்றி நடைபோடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெற்றி நிச்சயம், கடமை, கண்ணியம் காப்போம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அறிக்கையின் முழு விவரம்:
தேர்தல் ஆணையம் மற்றும் அரசாங்கத்தின் உத்தரவை மீறி, தேர்தல் வெற்றிக்கான கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் போடுமாறும், இப்படி மக்கள் கூடி கொண்டாடும் பகுதிகளின் காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகளை இடைநீக்கம் செய்யுமாறும் சம்பந்தப்பட்ட தலைமைச் செயலாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
புதுச்சேரியில் சமீபத்திய நிலவரப்படி என்.ஆர். காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தற்போது என். ஆர்.காங்கிரஸ் 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
மே2, அதாவது ஞாயிற்றுக்கிழமை வாக்கெண்ணிக்கை மையங்களுக்குள் வரும் வேட்பாளர்கள், கட்சி வாக்குப்பதிவு முகவர்கள், அதிகாரிகள் என அனைவரும் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்துகொண்டு, தொற்று இல்லை என உறுதி செய்யும் சான்றிதழை வைத்திருப்பது அவசியம் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின்போது போதுமான கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைச் செயல்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசியல் கட்சிகள் மெகா சாலை பேரணி நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது மட்டுமல்லாமல், மேற்கு வங்கதேர்தல் பரப்புரை கூட்டங்களில் 500 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு போட்டுள்ளது.
வேளச்சேரியில் நடைபெற்று வரும் மறுவாக்குப்பதிவு மையத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வாக்குப்பதிவு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.