5வது நாளாக ஐடி ரெய்டு! இன்றாவது முடிவுக்கு வருமா?

சென்னை மையமாக கொண்ட ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலம், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, இளவரசி மகன் விவேக் வீடுகளில் இன்றும் 5-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

Last Updated : Nov 13, 2017, 09:01 AM IST
5வது நாளாக ஐடி ரெய்டு! இன்றாவது முடிவுக்கு வருமா? title=

சென்னை மையமாக கொண்ட ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலம், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, இளவரசி மகன் விவேக் வீடுகளில் இன்றும் 5-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

கடந்த 9-ம் தேதி வருமான வரி துறை சோதனை நடத்தியது அனைவரும் அறிந்ததே. முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாததால் இந்த சோதனை நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

190 இடங்களில் 2,000 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை பல இடங்களில் 3 நாட்கள் நீடித்தன. இந்நிலையில் 5-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை நடத்தி வருகின்றனர்.

சசிகலாவின் கொடநாடு கிரீன் டீ எஸ்டேட்டில் ரகசியமாக பதுக்கப்பட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்றைய சோதனையில் மேலும் முக்கிய ஆவணங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Trending News