RBI முக்கிய அறிவிப்பு: UPI பரிவர்த்தனை வரம்பு அதிகரித்தது, விவரம் இதோ

RBI Update: வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் முந்தைய விகிதத்திலேயே தொடரும் என அறிவித்த ரிசர்வ் வங்கி, UPI மற்றும் ஃபின்டெக் ஈகோசிஸ்டம் அமைப்பு மற்றும் நிதிச் சந்தைகளில் பல்வேறு ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அறிவித்தது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 8, 2023, 01:23 PM IST
  • ரிசர்வ் வங்கி, இந்தியாவில் நிதித் துறைக்கான கிளவுட் வசதியை நிறுவுவதில் பணியாற்றி வருவதாக அறிக்கையில் கூறியது.
  • இது தரவு பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் தனியுரிமையை மேம்படுத்தும். இது சிறந்த அளவிடுதல் மற்றும் வணிக தொடர்ச்சியை எளிதாக்கும்.
  • கிளவுட் வசதி நடுத்தர காலத்திற்கு அளவீடு செய்யப்பட்ட பாணியில் வெளியிடப்பட உள்ளது.
RBI முக்கிய அறிவிப்பு: UPI பரிவர்த்தனை வரம்பு அதிகரித்தது, விவரம் இதோ title=

RBI Update: மருத்துவம் மற்றும் கல்வி சேவைகளுக்கான UPI பரிவர்த்தனை வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் முந்தைய விகிதத்திலேயே தொடரும் என அறிவித்த ரிசர்வ் வங்கி, UPI மற்றும் ஃபின்டெக் ஈகோசிஸ்டம் அமைப்பு மற்றும் நிதிச் சந்தைகளில் பல்வேறு ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அறிவித்தது.

e-Mandates வரம்பு: 

மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான சந்தா, இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துதல் மற்றும் கிரெடிட் கார்டு பில்களின் கட்டணங்களை செலுத்துதல் ஆகியவற்றுக்கான 1 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ஈ-மேண்டேட் கூடுதல் காரணி அங்கீகாரத்திற்கு ( e-Mandates Additional Factor Authentication - AFA) RBI விலக்கு அளித்துள்ளது.

பரிவர்த்தனைக்கு முந்தைய மற்றும் பிந்தைய அறிவிப்புகள், பயனர்களுக்கான விலகல் வசதி போன்ற தற்போதைய தேவைகள் தொடரும் என்று ஆர்பிஐ (RBI) கூறியது. இது தொடர்பான திருத்தப்பட்ட சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

தற்போது, ரூ. 15,000 -க்கு மேல் தொடர்ச்சியான பரிவர்த்தனைகளுக்கு பணம் செலுத்துவதற்கான e-Mandates -களுக்கு அங்கீகாரத்தின் கூடுதல் காரணி தேவைப்படும். இந்த நடவடிக்கை e-Mandates -களின் பயன்பாட்டை மேலும் துரிதப்படுத்தும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது பதிவு செய்யப்பட்ட e-Mandates -களின் எண்ணிக்கை 8.5 கோடியாக உள்ளது. மாதத்திற்கு கிட்டத்தட்ட ரூ.2800 கோடி பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்படுகின்றன. 

Fintech களஞ்சியத்தை அமைத்தல்: 

ஃபின்டெக் ஈகோசிஸ்டம் அமைப்பில் உள்ள முன்னேற்றங்களை நன்கு புரிந்துகொள்வதற்காக Fintech களஞ்சியத்தை அமைப்பதற்கான முடிவை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 2024 அல்லது அதற்கு முன்னதாக ரிசர்வ் வங்கியின் கண்டுபிடிப்பு மையத்தால் செயல்படுத்தப்படும். இந்த களஞ்சியத்திற்கு தானாக முன்வந்து தொடர்புடைய தகவல்களை வழங்க ஃபின்டெக்குகள், அதாவது நிதி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.

Fintechs உடன் வங்கிகள் மற்றும் NBFCகள் போன்ற நிதி நிறுவனங்களின் கூட்டாண்மை அதிகரித்து வரும் நிலையில் இந்த முன்முயற்சி எடுக்கப்படுகின்றது. 

நிதித் துறைக்கான கிளவுட் வசதியை நிறுவுதல்: 

ரிசர்வ் வங்கி, இந்தியாவில் நிதித் துறைக்கான கிளவுட் வசதியை நிறுவுவதில் பணியாற்றி வருவதாக அறிக்கையில் கூறியது. இது தரவு பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் தனியுரிமையை மேம்படுத்தும். இது சிறந்த அளவிடுதல் மற்றும் வணிக தொடர்ச்சியை எளிதாக்கும். கிளவுட் வசதி நடுத்தர காலத்திற்கு அளவீடு செய்யப்பட்ட பாணியில் வெளியிடப்பட உள்ளது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பல்வேறு பொது மற்றும் தனியார் கிளவுட் வசதிகளைப் பயன்படுத்துகின்றன என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது.

மேலும் படிக்க | வீட்டில் இதற்கு மேல் பணம் இருந்தால் 137% அபராதம்: வருமான வரி விதியை தெரிந்துகொள்ளுங்கள்

இணைக்கப்பட்ட கடனுக்கான கட்டமைப்பு: 

அனைத்து ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் இணைக்கப்பட்ட கடன் வழங்குவதற்கான ஒரு ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை கட்டமைப்பை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்களின் கடன்களின் விலை மற்றும் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் என்று வங்கி கூறியது.

கடன் திட்டங்களின் இணையத் திரட்டல்: 

கடன் திட்டங்களின் வலைத் தொகுப்பிற்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்க RBI முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் மையத்தன்மை மற்றும் டிஜிட்டல் கடன் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் கடன் திட்டங்களை இணையத்தில் திரட்டுவது தொடர்பான பல தகவல்கள் தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தன் கவலையை வெளிப்படுத்தியது. 

அந்நியச் செலாவணி அபாயங்களைக் கட்டுப்படுத்துதல்: 

சந்தை வளர்ச்சிகள் மற்றும் சந்தை பங்கேற்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், அந்நிய செலாவணி டெரிவேடிவ் பரிவர்த்தனைகளுக்கான தற்போதைய ஒழுங்குமுறை கட்டமைப்பு சுத்திகரிக்கப்பட்டு, ஒரு முக்கிய வழிகாட்டுதலின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி கூறியது. இது செயல்பாட்டு திறன் மற்றும் பயனர்களுக்கான அணுகலை எளிதாக்கி அந்நிய செலாவணி டெரிவேடிவ் சந்தையை மேம்படுத்தும் என ரிசர் வங்கி மேலும் தெரிவித்தது. 

மேலும் படிக்க | RBI Monetary Policy: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை.. இஎம்ஐ கட்டுபவர்களுக்கு நிம்மதி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News