வங்கி ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 17% ஊதிய உயர்வு: வெளியானது அசத்தலான அறிவிப்பு

Bank Employees Salary Hike: அரசு வங்கி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள உயர்வு குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 9, 2023, 03:10 PM IST
  • நீங்கள் வங்கி ஊழியரா?
  • உங்கள் குடும்பத்தில் யாராவது வங்கி ஊழியர்கள் உள்ளார்களா?
  • அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது.
வங்கி ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 17% ஊதிய உயர்வு: வெளியானது அசத்தலான அறிவிப்பு title=

Bank Employees Salary Hike: நீங்கள் வங்கி ஊழியரா? உங்கள் குடும்பத்தில் யாராவது வங்கி ஊழியர்கள் உள்ளார்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. ஆம், அரசு வங்கி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள உயர்வு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. 

17% வருடாந்திர அதிகரிப்பு 

இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் பிற வங்கி தொழிற்சங்கங்களுக்கு இடையே ஊதிய திருத்தம் குறித்து ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டிலிருந்து தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கு சம்பளத்தில் 17% வருடாந்திர அதிகரிப்பு ஒப்புக்கொள்ளப்பட்டது. இது நவம்பர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும்.

அனைத்து சனிக்கிழமைகளும் பொது விடுமுறை

இருப்பினும், ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன், அனைத்து சனிக்கிழமைகளையும் வங்கிகளுக்கு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. சம்பள உயர்வு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் கீழ், அடிப்படை சம்பளத்துடன் 3 சதவீத அகவிலைப்படி (DA) சேர்க்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஓய்வூதிய திருத்தமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் 5 நாட்கள் வேலை செய்வது குறித்து நிதி அமைச்சகம் (Finance Ministry) இறுதி முடிவு எடுக்கும்.

2022 நிதியாண்டில் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளில் வருடாந்திர அதிகரிப்பு வருடாந்திர சம்பள சீட்டு தொகையில் 17% ஆக இருக்கும். இது எஸ்பிஐ (SBI) உட்பட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் சுமார் ரூ.12,449 கோடியாக இருக்கும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, அடிப்படை ஊதியத்தின் 8,088 புள்ளிகளுடன் தொடர்புடைய அகவிலைப்படியை இணைத்து, 3% ஏற்றத்தில் சேர்த்த பிறகு, அக்டோபர் 21, 2022 முதல் புதிய சம்பள அமைப்பு உருவாக்கப்படும். இது ரூ.1,795 கோடியாக இருக்கும்.

மேலும் படிக்க | ITR தாக்கலில் மறைக்கக்கூடாத 6 விஷயங்கள்: மறைத்தால் வீடு தேடி வருமான வரி நோட்டீஸ் வரும்

ஆல் இந்தியா வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் (ஐபிஏ) தரப்பில் X இல் தகவல்கள் பகிரப்பட்டு சம்பள உயர்வு தொடர்பான தகவல்கள், வழங்கப்பட்டன. கூட்டுக் குறிப்பை இறுதி செய்வதற்கு முன் மீதமுள்ள பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என்றும் AIBOC தெரிவித்துள்ளது. சம்பள உயர்வு ஒப்பந்தம் குறித்து ஏஐபிஓசி, 'ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக 17 சதவீதத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகிய இரண்டும் அடங்கும்.' என கூறியுள்ளது.

7th Pay Commission

சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி அதிகரிப்பு (DA Hike) ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வந்தது. தற்போது மத்திய ஊழியர்களுக்கு 46 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த டிஏ உயர்வில் இது 50 சதவீதமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு அடுத்த ஊதியக்குழுவும் வரக்கூடும். 8வது ஊதியக்குழு (8th Pay Commission) உருவாக்கப்பட்டால் அதன் உருவாக்கத்தோடு சில வழக்கமான முறைகளும் மாற்றப்படக்கூடும் என கூறப்படுகின்றது. பத்து வருடங்களுக்கு ஒரு முறை என்பதற்கு பதிலாக அரசு ஒவ்வொரு வருடமும் ஊழியர்களின் சம்பளத்தை மதிப்பாய்வு செய்ய ஆரம்பிக்கலாம் என்று ஊடகக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. சம்பள திருத்தத்திற்காக (Salary Hike) ஊழியர்கள் 10 ஆண்டுகள் அதாவது நீண்ட காலம் காத்திருக்க வேண்டாம் என அரசு விரும்புகிறது. அவர்களின் பணித்திறன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சம்பளத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். 7வது ஊதியக் குழுவிலேயே (7th Pay Commission) இது பரிந்துரைக்கப்பட்டது. மேலும் சம்பளத்தை உயர்த்த ஊதியக்குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து அம்சங்களையும் மனதில் வைத்து அரசு ஒரு புதிய வழியில் திட்டமிட்டு வருகிறது. 

மேலும் படிக்க | இவைதான் நாட்டின் மிகச்சிறந்த வங்கிகள், பணம் பத்திரமாக இருக்கும்: புகழ்ந்து தள்ளிய ரிசர்வ் வங்கி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News