பல விதமான பழங்கள் இருந்தாலும், பல நூற்றாண்டுகளாக மக்கள் உண்டு வரும் பழங்கள் என்று பார்த்தால் பட்டியல் சிறியதாகவே இருக்கும். அப்படிப்பட பழங்களில் ஒன்று வில்வப் பழம்.தெய்வீகமான மரங்களில் ஒன்றாக கருதப்படும் வில்வ மரத்தில் விளையும் வில்வ பழத்தை ஸ்ரீபலம் என்றும் அழைப்பார்கள்.
சப்பாத்திக் கள்ளி பழத்தை, உண்பதற்கு ஏற்ற பழமாக பலரும் பார்ப்பதில்லை. அதிலுள்ள முட்களை நினைத்தாலே பயப்படுவது காரணமாக இருக்கலாம். ஆனால், உண்மையில் சப்பாத்திக் கள்ளியின் பழம் பல மருத்துவ பயன்பாடுகளைக் கொண்டது.
ஒவ்வொரு பழமும் எண்ணற்ற ஊட்டச்சத்துகளையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளன. அவை நோய் எதிர்ப்பு மண்டல்லதைப் பலப்படுத்தி, தொற்று மற்றும் தீவிர நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன.
உடலை ஆரோக்கியமாகவும், பிட் ஆகவும் வைத்திருப்பதில் நமது உணவு 70 சதவீதம் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமல்லாத உணவு தேர்வுகள் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கின்றன.
பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்றாலும், சில நேரத்தில் பழங்களை சாப்பிடுவது நன்மைகளுக்கு பதிலாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாழை அனைவரையும் வாழவைக்கும் என்பதன் அடையாளமாகத் தான் சுபகாரியங்கள் நடைபெறும்போது வாழைமரம் கட்டுவார்கள். வாழை, வாழ்க்கைக்கு சுபசகுனம் மட்டுமல்ல, மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையான பழம். உலகின் உணவுத் தேவையில் கணிசமாக பூர்த்தி செய்கிறது வாழை இனங்கள்.
முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம். வாழைபழத்தில் பல்வேறு ரகங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான சத்துக்களைக் கொண்டன. பொதுவாக வாழைப்பழத்தில் இருக்கும் எல்லா நன்மைகளையும் கொண்டிருந்தாலும், செவ்வாழை, தனது கூட்டத்தின் ராஜா என்றே சொல்லும் அளவுக்கு பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் அபாயத்தைத் தடுக்க கிவி பழம் உதவும். வாரத்திற்கு ஓரிரு கிவி பழங்களை சாப்பிடுவதன் மூலம், சுவாச நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கும். கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம், வறட்டு இருமல் போன்றவற்றை சரிசெய்து, நுரையீரலை சரியாக செயல்படச் செய்யும்
ஒவ்வொரு பருவத்துக்கும் விதவிதமான காய்கறிகளும், பழங்களும் கிடைக்கின்றன. ஒவ்வொரு பழமும் தனிச் சிறப்பான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன. உதாரணமான எலுமிச்சை, கொழுமிச்சை, இரண்டுமே ஏறக்குறைய ஒரே சத்துக்களைக் கொண்டிருந்தாலும் இரண்டுக்கும் உள்ள சத்துக்களும் அவற்றின் அளவுகளும் மாறுபடும்.
பழங்களும், பச்சைக் காய்கறிகளும் உடலுக்கு உகந்தவை. நோய்களை தூர விரட்டுபவை. அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிட்டால் நோய் நம்மை விட்டு விலகிச் சென்றுவிடும்.
உணவே மருந்து என்பது உண்மையான விஷயம் என்றாலும், வெறும் வயிற்றில் உணவுகளை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவே தீமை விளைவிப்பதாக மாறிவிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.