ஆதாயம் தரும் பதவி வகிப்பதால் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 27 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கோரி புதிய மனு ஒன்று, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டு ள்ளது.
27 ஆம் ஆத்மி எம்எல்ஏ- க்கள் ஆதாயம் தரும் பதவிகளை வகிப்பதாக அவர்களுக்கு எதிராக ஜூன் மாதம் ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு கடந்த மாதம் ஜனாதி பதி மாளிகை மூலம் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் 21 செயலாளர்கள் நியமித்த விவகாரம் டில்லி ஐகோர்ட், நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பார்லிமென்ட்டில் 21 செயலாளர்களை நியமித்து. இந்த விவகாரம் எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட், 21 செயலாளர்களின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி மந்திரிசபையில் சமூக நலத்துறை அமைச்சர் சந்தீப் குமார் பெண்களுடன் இருப்பது போன்ற வீடியோ வெளியானது. இச்சம்பவம் பெரும் சர்ச்சை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி மந்திரிசபையில் சமூக நலத்துறை அமைச்சர் சந்தீப் குமார் பெண்களுடன் இருப்பது போன்ற வீடியோ வெளியானது. இச்சம்பவம் பெரும் சர்ச்சை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லியில் ஆளும் கட்சியாக இருந்தாலும், தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சிக்கு பணம் எதுவும் இல்லை என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்கள் வாயிலாக கெஜ்ரிவால் பிரதமர் மோடி மீது பகிரங்க குற்றம்சாட்டியுள்ளார்.
டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இக்கட்சி சார்பில் தனது ஆதரவாளர்களுக்கு 10 நிமிட வீடியோ பதிவை சமூக வலைதளங்கள் வாயிலாக அனுப்பியுள்ளார் கெஜ்ரிவால் அதில் அவர் பேசியிருப்பதாவது:-
ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பாராளுமன்றத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய 9 பேர்கள் கொண்ட குழுவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அமைத்து உள்ளார்.
பாஞ்சாப் விவகாரத்தில் தலையிட வேண்டாம் எனக்கூறியதால் தான் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததாக சித்து கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் நவ்ஜோத் சிங் சித்து நேற்று திடீர் என்று மேல்-சபை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவரது மனைவியும் பஞ்சாபில் தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து இருவரும் ஆம் ஆத்மியில் இணைய போவதாக செய்திகள் வெளியாகின.
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் டெல்லி மேல்-சபை எம்.பி-யாக நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கிண்டலடித்து 2014-ம் ஆண்டு பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால் மீது டெல்லி பெருநகர போலீஸார் பாலியல் அத்துமீறல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் பெண் ஒருவர் பிரகாஷ் ஜார்வால் மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பிரகாஷ் ஜார்வால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. தினேஷ் மொகானியா பெண்களிடம் தவறாக நடந்துக் கொண்டார் என்று பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் சங்கம் விகார் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தினேஷ் மொகானியா. மொகானியாவின் அலுவலகத்திற்கு சென்று பெண்கள் சிலர் தண்ணீர் பிரச்சனையை கூறி உள்ளனர். ஆனால் மொகானியா அவர்களை வெளியே தள்ளியதாகவும், அவர்களிடம் தவறாக நடந்துக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.