திண்டுக்கல்: லேகியம் விற்ற மோடி, ஓபிஎஸ், எடப்பாடி இரண்டும் பைத்தியம் - லியோனி

Dindigul Leoni campaign: திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் சச்சிதானந்தம்-ஐ ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட லியோனி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பங்கமாய் கலாய்த்தார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 3, 2024, 10:07 PM IST
  • திண்டுக்கல் லியோனி தேர்தல் பிரச்சாரம்
  • திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பேச்சு
  • மோடி, ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி மீது சாடல்
திண்டுக்கல்: லேகியம் விற்ற மோடி, ஓபிஎஸ், எடப்பாடி இரண்டும் பைத்தியம் - லியோனி title=

திண்டுக்கல் லியோனி பிரச்சாரம்

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் திமுக கூட்டணி வேட்பாளர் சச்சிதானந்தமை ஆதரித்து திண்டுக்கல் ஐ லியோனி பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது பேசிய அவர், சென்ற முறை தமிழ்நாட்டில் மட்டுமில்லை இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்த ஒரே வேட்பாளர் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேலுச்சாமி என்று கூறியதுடன், சிறுவயதில் மேட்டுப்பட்டி பகுதியில் நடந்த அனுபவங்களையும் கலகலப்பாக லியோனி பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் மோடி குறித்து விமர்சனம்

தொடர்ந்து பேசிய லியோனி, பத்து ஆண்டுகள் இந்த நாட்டிற்கு எதுவுமே செய்யாமல் டுபாக்கூர் வேஷம் போடும் ஒருவர் தான் நரேந்திர மோடி.  அம்பானி, அதானி போன்ற பணக்காரர்களை  பிடித்துக்கொண்டு உலகத்தை சுத்தி வருகிறார். சிலிண்டர் விலையை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி நமது பெண்களை சமைக்க விடாமல் செய்தவர்தான் நரேந்திர மோடி. இந்த ஆட்சியில் தான் மணிப்பூரில் மலை சாதி இரண்டு பெண்களின் நிர்வாணமாக்கி பாலியல் பலாத்காரம் செய்வதற்கு காரணமாக இருந்தவர் நரேந்திர மோடி. தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது வராத நரேந்திர மோடி தற்போது ஆறுமுறை வந்துள்ளார். இத்தனை முறையும் வந்து லேகியம் வித்துவிட்டு சென்றுள்ளார் என விமர்சித்தார்.

மேலும் படிக்க | மனைவியோடு வாழாத மோடி, மக்களை மட்டும் எப்படி குடும்பமாக நினைப்பார்? முத்தரசன் காட்டம்

மோடியின் தமிழ் வேஷம்

பெண்களைப் படிக்க வைத்து அழகு பார்த்த ஆட்சி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சி. நரேந்திர மோடி பெண்களுக்காக என்ன செய்தார். நரேந்திர மோடி தமிழ் மொழியை உண்மையிலேயே நேசிக்கிறீர்கள் என்றால் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவித்தால் நீங்கள் உண்மையாக தமிழை நேசிக்கிறீர்கள் என்று ஏற்றுக் கொள்கிறோம். தமிழ் மொழிக்கு 60 கோடி ரூபாய் தான் நிதி கொடுக்கிறீர்கள், ஆனால் சமஸ்கிருதம், இந்தி மொழிகளுக்கு 1300 கோடி ரூபாய் நிதியை கொடுத்துட்டு தமிழ் மொழிக்கு அதுல பத்துல ஒரு பங்கு நிதியை கொடுத்துட்டு ஐ லவ் தமிழ் பீப்பிள் ஐ லவ் தமிழ் கல்ச்சர் அப்படின்னு டுபாக்கூர் விடுகிறார்.

எடப்பாடி, ஓபிஎஸ் மீது விமர்சனம்

எடப்பாடி பழனிச்சாமிக்கு யாரு தான் ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இபிஎஸ், ஓபிஎஸ் இருவம் பைத்தியங்கள். அண்ணாமலை கத்திக் கொண்டிருக்கிறார். திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை பார்த்து பிஞ்ச செருப்பு என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த யோகிதையும் கிடையாது என்றும் திண்டுக்கல்லில் லியோனி விமர்சித்து பேசினார்.

மேலும் படிக்க | கச்சத்தீவு விவகாரம்: 20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை.. செல்லூர் ராஜூ கிண்டல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News