ரயில் பயணிகளுக்கு GOOD நியூஸ்! இனி ‘இந்த’ சேவைக் கட்டணம் கிடையாது!

வந்தே பாரத், துரந்தோ, ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற ரயில்களில், டிக்கெட் புக்கிங் செய்யும் போது, கேட்டரிங் சேவையைத் தேர்வு செய்யாதவர்களுக்கு, டீக்கு மற்றும் மதிய உணவிற்கு கூடுதலாக 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 16, 2022, 11:35 AM IST
  • ரயில்வேயில் உணவு விலை அதிகரித்தது.
  • சேவைக் கட்டணம் வசூலிக்க தடை விதித்தது இந்திய ரயில்வே.
  • ரயில் பயணிகளுக்கு நிம்மதி அளிக்கும் நியூஸ்.
ரயில் பயணிகளுக்கு GOOD நியூஸ்! இனி ‘இந்த’ சேவைக் கட்டணம் கிடையாது! title=

அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும். பிரீமியம் ரயில்களில் சேவைக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் ரத்து செய்துள்ளது.  இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இனி கேட்டரிங் சேவைக்காக இனி, ரூ.50 கூடுதல் கட்டணத்தை வசூலிக்க முடியாது. இது தொடர்பாக, இந்திய ரயில்வே வாரியம் ஐஆர்சிடிசிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வந்தே பாரத், துரந்தோ, ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற ரயில்களில், டிக்கெட் புக்கிங் செய்யும் போது, கேட்டரிங் சேவையைத் தேர்வு செய்யாதவர்களுக்கு, டீக்கு மற்றும் மதிய உணவிற்கு கூடுதலாக 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது. ரயில்வே வாரியத்தின் இந்த நடவடிக்கை இந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு நிம்மதியை அளிக்கும்.

சேவைக் கட்டணம் வசூலிக்க தடை

இப்போது IRCTC பிரீமியம் ரயில்களில் சேவைக் கட்டணத்தை இனி மீட்டெடுக்க முடியாது. இது தொடர்பாக ரயில்வே சுற்றறிக்கையையும் வெளியிட்டுள்ளது. இந்த விதி அமலுக்கு வருவதற்கு முன்பு, உணவு மற்றும் பான ஆர்டர்களுக்கு ஐஆர்சிடிசி சேவைக் கட்டணமாக ரூ.50 வசூலித்தது. டிக்கெட் முன்பதிவு செய்யும் போது உணவு விருப்பத்தை தேர்வு செய்யாத பயணிகளிடம் இருந்து இந்த சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | Indian Railways: ரயில் டிக்கெட்டின் 5 இலக்க எண் கூறும் முக்கிய தகவல்கள்!

ரயில்வேயில் உணவு விலை உயர்ந்தது

ஒருபுறம், டீ மற்றும் தண்ணீருக்கான சேவைக் கட்டணத்தை ரயில்வே ரத்து செய்த நிலையில், ஐஆர்சிடிசி ரயிலில் கிடைக்கும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. ரயில்வே டிக்கெட்டை புக் செய்யும் போது உணவு விருப்பத்தை தேர்வு செய்யதாக பயணிகள் இனி காலை உணவு மற்றும் உணவுக்கு ரூ.50 கூடுதலாக செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது.

மேலும் படிக்க  | வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 45-ஆவது பிறந்தநாள்; கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்

வைரலான IRCTC பில்

சில நாட்களுக்கு முன்பு, ரயில்வேயின் வாங்கிய டீக்கான ஒரு பில் மிகவும் வைரலானது, அதில் டீ ரூ. 20 மற்றும் அதற்கு சேவை கட்டணம் ரூ.50 வசூலிக்கப்பட்டது. இந்த பில் தொடர்பாக ஐஆர்சிடிசியில் இருந்து பல விமர்சனங்கள் எழுந்தன. ஜூலை 2022 இல், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் விதிக்கப்படும் சேவைக் கட்டணங்களைத் தடை செய்தது.

மேலும் படிக்க | Indian Railways: வந்தே பாரத் விரைவு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி!

மேலும் படிக்க | ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News