சந்திராயன் 2 விண்கலத்தில் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் ஏப்ரலுக்கு பதில் அக்டோபரில் தான் விண்ணில் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.
சந்திராயன் 2 திட்டத்தின் மூலம் நிலவில் தரையிறக்கப்படும் ஆய்வூர்தி நிலவின் முதல் வட்டத்தில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்
ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க, இஸ்ரோ உதவியுடன் எச்சரிக்கை விடுக்கும் கருவிகளை பொருத்த இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் இன்று மாலை விண்ணில் பாய்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் சார்பில் இன்று பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் ஏவப்படுகிறது. இதில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இன்று இரவு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1எச் செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி39 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக சரியான பாதையில் நிறுத்த முடியாமல் தோல்வி அடைந்தது என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான 29 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று 2 மணிக்கு தொடங்கியது. இந்த ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 19 நி.மி., 45 நொடிகளில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1எச் செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தம் என இஸ்ரோ தெரிவித்தது.
இஸ்ரோவின் முன்னாள் பேராசிரியர் மற்றும் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளரான யு.ஆர்.ராவ் இன்று அதிகாலை காலமானார்.
1932-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் அதம்பூர் என்ற கிராமத்தில் இவர் பிறந்தார். பள்ளி, கல்லூரிகளில் ஏராளமான நூல்களை கற்று தன்னை மேம்படுத்திக் கொண்ட நிலையில், காஸ்மிக் கதிர்களில் உள்ள எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து 1975-ம் ஆண்டு இவரது வழிகாட்டுதலின் படி இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆர்யபட்டா, பாஸ்கரா, ஆப்பிள், ரோஹிணி, இன்சாட்-1, இன்சாட்-2 உள்பட பல செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.
‘டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்’ இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படவுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் நினைவாக, கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் புதிய அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கு ‘டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படவுள்ளது.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட் மூலம் ‘கார்ட்டோசாட்– 2இ’ செயற்கைகோளை நாளை காலை 9.29
மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுண் தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் செலுத்தி சாதனை படைத்து வருகிறது.
அந்தவகையில், நாளை 31 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட் விண்ணில் சீறிப்பாயும்.
வான்வழி மற்றும் கடல் போக்குவரத்து தொடர்பான தகவல்களை பெறும் வகையில் இந்த செயற்கை கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று மாலை 5.28 மணிக்கு, மாக் 3 டி1 ராக்கெட் மூலம் ஜி சாட்-19 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டால், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இஸ்ரோவின் கனவும் விரைவில் சாத்தியமாகும் என எதிர்பாரக்கப்படுகிறது.
இந்நிலையில் ஜி சாட் செயற்கைக்கோளின் 10 முக்கிய அம்சங்கள்:-
> ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஏவப்படும் அதிக எடைகொண்ட செயற்கைக்கோள் ஜிசாட் 19 ஆகும்
ஜிஎஸ்எல்வி மாக் 3 டி1 ராக்கெட் மூலம் ஜி சாட்-19 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று மாலை 5.28 மணிக்கு, மாக் 3 டி1 ராக்கெட் மூலம் ஜி சாட்-19 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 25 மணி நேர கவுன்டவுன் நேற்று மாலை 3.58 மணிக்கு துவங்கியது.
இஸ்ரோவால் முழுவதும் உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட், ஜிசாட்-19 செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த உள்ளது. 3,136 கிலோ எடை கொண்ட இது, இணைய தொலைத்தொடர்பு செயற்கைகோள் ஆகும்.
2014-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருது, இஸ்ரோ நேற்று வழங்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இவ்விருதை வழங்க, இஸ்ரோ சார்பில் அதன் தலைவர் கிரண் குமார் பெற்றுக் கொண்டார்.
நினைவுப் பரிசு, ரூ.1 கோடி பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்ட இவ்விரு துக்கு, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையிலான தேர்வுக்குழு இஸ்ரோவை தேர்வு செய்தது.
2015-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதை, அகதிகள் மறுவாழ்வு ஐ.நா. ஆணையருக்கு மன்மோகன் கடந்த ஆண்டு வழங்கினார்.
தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட் 9 செயற்கைக்கோள் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து மாலை 4:57 மணிக்கு ஜிஎஸ்எல்வி எஃப் 9 ராக்கெட் மூலம் ஜிசாட் செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்த இஸ்ரோ திட்டமிட்டது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் சதிஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டிற்காக ஜிசாட் 9 செயற்கைக்கோளை 253 கோடி ரூபாய் செலவில் இந்தியாவே தயாரித்துள்ளது.
தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட் 9 செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து மாலை 4:57 மணிக்கு ஜிஎஸ்எல்வி எஃப் 9 ராக்கெட் மூலம் ஜிசாட் செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் சதிஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டிற்காக ஜிசாட் 9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
விண்வெளி ஆய்வில் இந்தியாவின் சாதனையை கண்டு அமெரிக்கா வியப்படைந்துள்ளது.
இந்தியா விண்வெளி ஆய்வில் பல புதிய சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறது.உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கைகோள்கள், ராக்கெட்டுகள், ராக்கெட்டுகளை இயக்கும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிரயோஜனிக் என்ஜின்களை சொந்தமாக உருவாக்கி, விண்வெளி ஆய்வு துறையில் வெற்றிகொடி நாட்டிவரும் இந்தியா, உள்நாட்டு தேவைக்காக மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு சொந்தமான பல்வேறு வகையான செயற்கை கோள்களையும் இங்கிருந்தபடி விண்ணில் செலுத்தி உலக நாடுகளின் கவனத்தை கவர்ந்து வருகிறது.
இந்திய விண்வெளி ஆய்வுத்துறையான இஸ்ரோவின் புதிய மைல்கல்லாக ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை தாங்கிச் செல்லும் பிஎஸ்எல்வி - சி 37 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்பட்டு புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.