PMC மற்றும் IL&FS கடன் பிரச்சினைகளின் பின்னணியில் வங்கித் துறையில் சிறந்த ஒழுங்குமுறை பொறிமுறையை உறுதி செய்ய மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
INX மீடியா பண மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான பி.சிதம்பரத்தை கைது செய்து விசாரிப்பது தொடர்பான முடிவை டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.
எஃகு துறை எந்தவொரு பெரிய மந்தநிலையையும் காணவில்லை என்றும், எஃகு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் போட்டி நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் இலாபத்தை பதிவு செய்வதற்காக அவற்றின் உற்பத்தி செலவுகளை குறைக்க வேண்டும் என்று ஸ்டீல் ஆணையம் (இந்தியா) தலைவர் அனில் குமார் சவுத்ரி திங்களன்று தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதற்கு காரணம், மக்கள் BS6 மற்றும் Ola, Uper போன்றவை தான் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!
பின்னடைவை சந்தித்துள்ள ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவும் என்று சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
வங்கிகள் இணைப்பதன் மூலம் இந்தியாவில் 27 வங்கியாக இருந்த எண்ணிக்கை, தற்போது அது 12 வங்கியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் வர்த்தகம் பல மடங்கு அதிகரிக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அபாயகரமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகயிள்ளது. குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் AIIMS சென்று அவரை காண இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.