8 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படையினர் அடாவடி

Last Updated : Aug 31, 2017, 10:12 AM IST
8 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படையினர் அடாவடி title=

கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது அதிகரித்து வரும் நிலையில் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மீனவர்களை வைத்திருந்த வலைகளையும், மீன்களையும் இலங்கை கடற்படையினர் கடலில் வீசினர். இதனால் மீனவர்கள் பாதியில் திரும்பினர். 

புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 மீனவர்களை கைது செய்தனர்.

 

 

Trending News