செந்தில் பாலாஜிக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிப்பு... ஜாமீனுக்கு வாய்ப்பில்லையா?

Remand For Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருப்பார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 14, 2023, 04:53 PM IST
செந்தில் பாலாஜிக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிப்பு... ஜாமீனுக்கு வாய்ப்பில்லையா? title=

Remand For Senthil Balaji:  சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால், அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் சுமார் 17 மணிநேரமாக நடைபெற்ற கைதானார். அவரை கைது செய்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், உடனடியாக சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையிவல் அனுமதிக்கப்பட்டார். 

கண்டனப் பொதுக்கூட்டம்

தொடர்ந்து, அவரை முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்தனர். தொடர்ந்து, செந்தில் பாலாஜி கைதுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். செந்தில் பாலாஜி கைதை கண்டித்து நாளை மறுநாள், கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். 

ராஜினாமா செய்ய கோரிக்கை

இருப்பினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட எதிர்கட்சிகள் செந்தில் பாலாஜியின் கைது வரவேற்றுள்ள நிலையில், செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்ற, தார்மீக ரீதியாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு: நீதிபதி சக்திவேல் விலகிய காரணம் என்ன?

நீதிபதி அல்லி வருகை

செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து பார்க்கும்போது அவரின் இதயத்தின் மூன்று முக்கிய இரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு இதய அறுவை சிகிச்சையானது நாளை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிகிறது. இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து கேட்டறிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, மருத்துவமனைக்கு வருகை தந்தார். 

ஜாமீன்?

அப்போது, செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கோரி  வழக்கறிஞர்கள் நீதிபதி அல்லியிடம் மனுதாக்கல் செய்தனர். அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆனால், அதுகுறித்த வாதங்களை அவர்கள் நீதிமன்றத்தில் வைத்துக்கொள்ளும்படி வழக்கறிஞர்களை நீதிபதி அல்லி அறிவுறுத்தினார்.

14 நாள் காவல்!
  
தொடர்ந்து, அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அடுத்த 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் ஜூன் 28ஆம் தேதி வரை செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்தார். 

முன்னதாக, அமலாக்கத்துறை இந்த கைதுக்கான காரணத்தை கூட செந்தில் பாலாஜிக்கோ, அவரது குடும்பத்திற்கோ தெரிவிக்கவில்லை என அவரின் வழக்கறிஞர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர். மேலும், அவரை கைது செய்யும்போது முறையான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்து ஆட்கொணர்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படும் செந்தில் பாலாஜி..? அவர் பதவிக்கு வரும் அடுத்த அமைச்சர் இவரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News