“நடிகை குஷ்பு முதலமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” மாநில மகளிரணி செயலாளர் ப.ராணி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு முதலமைச்சரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ப.ராணி பேட்டி  

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Mar 13, 2024, 06:47 PM IST
  • குஷ்புவை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம்
  • பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
  • நாமக்கல் ப.ராணி ஆவேச பேச்சு
“நடிகை குஷ்பு முதலமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” மாநில மகளிரணி செயலாளர் ப.ராணி title=

மகளிர் உரிமை தொகை குறித்த குஷ்புவின் அவதூறு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கழக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தமிழ்நாட்டை விட்டு மட்டுமல்ல இந்தியாவை விட்டு விரட்டுவோம் என முழக்கம்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து பாஜக தேசிய மகளிரணி ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு அவதூறு பேச்சு பேசியதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மகளிர் மத்தியில் அவருக்கு தொடர்ந்து கண்டனம் வலுப்பெற்று வருகின்றது. அந்த வகையில் கழக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமானது சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. மகளிர் தொண்டரணி மாநில செயலாளர் நாமக்கல் ப.ராணி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக மகளிர் அணியினர், மாநில மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

மேலும் படிக்க |  பைக் வைத்திருப்பவர்கள் உஷார்! இந்த மாடல் பைக் தான் அதிகம் திருடு போகிறதாம்!

தொடர்ந்து கலைஞர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய குஷ்புவை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அணியினர், குஷ்புவின் உருவ பொம்மையை எரித்தும் சாலையில் அமர்ந்து குஷ்பவிற்கு எதிராக கண்டனம் முழக்கம் மட்டும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ப.ராணி,

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து நடிகை குஷ்பு அவதூறாக பேசிய பேச்சுக்கு நாங்கள் கண்டிக்கின்றோம். ஒரு கோடியே 80 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத்தொகையை பெறும் இந்த நேரத்தில் அரசின் திட்டம் குறித்து அவதூறாக பேசும் குஷ்புவிற்கு மகளிர் பெறும் இந்த திட்டம் குறித்து எப்படி புரிந்து கொள்ள முடியும்.  மகளிர் உரிமை தொகை குறித்து அவதூறாக பேசியதற்கு குஷ்பூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய அளவில் போராட்டங்கள் வலுப்பெறும் என்றார்.

மேலும் படிக்க | என்னை பார்த்து ஏன் பயப்படுறீங்க? திமுக-வை விளாசிய குஷ்பூ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News