தொடர்ந்து வெற்றி பெறுவேன்: டி.டி.வி தினகரன் பேட்டி!

ஆர்.கே.நகர் மக்கள் தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக வாக்களித்துள்ளனர் என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 24, 2017, 01:35 PM IST
தொடர்ந்து வெற்றி பெறுவேன்: டி.டி.வி தினகரன் பேட்டி! title=

மதுரை விமான நிலையத்தில் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தினகரன், வேட்பாளரை வைத்தே சின்னம் நிர்ணயிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடம் இருந்தால்தான் இரட்டை இலை வெற்றிச்சின்னம். 

எம்.என்.நம்பியாரிடமும், பி.எஸ்.வீரப்பாவிடமும் சின்னம் இருந்தால் மக்கள் வாக்களிப்பார்களா என கேள்வி எழுப்பினார்.ஆர்.கே.நகர் மக்கள் தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக வாக்களித்துள்ளனர் என்றார். மதுசூதனன் ரவுடியிசத்தின் மொத்த உருவம். அவர்களுடைய கும்பல் அங்கு தகராறு செய்ததால் வாக்கு எண்ணிக்கை சிறிது நேரம் தடைபட்டது. 

ஆர்.கே.நகர் மக்கள் ஜெயலலிதாவுக்கு அடுத்து அந்த தொகுதியில் இருந்து வேட்பாளராக யார் வர வேண்டும் என நினைத்து வாக்களித்துள்ளனர். 

எம்.ஜி.ஆர். அவரது நினைவு நாளில் ஆர்.கே.நகரில் மக்கள் விரும்பிய சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற ஆசி வழங்கியுள்ளார் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Trending News