மக்களே உஷார்: நாளை ஆரம்பம் ஆகிறது அக்னி நட்சத்திரம், வெயிலை சமாளிக்க சில டிப்ஸ் இதோ

அதிக தேவை இல்லாத பட்சத்தில், மதிய வேளையில், அதாவது சூரியன் உச்சி வானில் இருக்கும்போது வெளியே செல்வதைத் தவுர்க்கவும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 3, 2022, 11:52 AM IST
  • நாளை அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.
  • கத்திரி வெயில் மே 4 முதல் மே 28 வரை இருக்கும்.
  • கத்திரி வெயிலில் உங்களுக்கு உதவக்கூடிய சில உதவிக்குறிப்புகள் இதோ.
மக்களே உஷார்: நாளை ஆரம்பம் ஆகிறது அக்னி நட்சத்திரம், வெயிலை சமாளிக்க சில டிப்ஸ் இதோ title=

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கும் ஒரு விஷயமாகும். அதுவும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலத்தில், வெப்பமும் சூடும் மிக அதிக அளவில் இருப்பது வழக்கம்.

ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் சித்திரை 21 ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14 ஆம் தேதி வரை கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது அதிக உச்சம் பெறும் வேளையில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும் இந்த காலம் ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. 

இந்த ஆண்டு கத்திரி வெயில் நாளை அதாவது மே 4 ஆம் தேதி தொடங்குகிறது. வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே மாதம் 28 வரை நீடிக்கும். 

வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின் போது சூரியனின் வீரியம் அதிகரிக்கும். பூமி உஷணத்தைக் கிளப்பும் வேகமும் இந்த காலத்தில் அதிகமாக இருக்கும். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, கத்திரி வெயில் காலத்தில்தான் கோடைக் காலத்தில் மிக அதிக வெப்பம் உணரப்படுவது வழக்கம். 

தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம்தொடங்குவதற்கு முன்பே ஒருசில நகரங்களில் வெயிலின் அளவு உச்சத்தைத் தொட்டு வருகிறது. 

மேலும் படிக்க | கோடையில் தலைவலியாக உள்ள தலைவலி.. என்ன செய்யலாம்.? 

கத்திரி வெயிலில் உங்களுக்கு உதவக்கூடிய சில உதவிக்குறிப்புகள்:

- அதிக தேவை இல்லாத பட்சத்தில், மதிய வேளையில், அதாவது சூரியன் உச்சி வானில் இருக்கும்போது வெளியே செல்வதைத் தவுர்க்கவும்.

- அதிகமாக தண்ணீர் அருந்துங்கள். வெயிலின் வெப்பத்தால் ஏற்படும் வியர்வையால் உடலில் நீர் சத்து குறையும். ஆகையால் அவ்வப்போது நீர் அருந்திக்கொண்டே இருப்பது நல்லது.

- காரமான, அதிக மசாலாக்கள் கலந்த உணவுகளையும், எண்ணெய் பதார்த்தங்களையும் தவிர்ப்பது நல்லது.

- அதிக அளவில் நீர்மோரை உட்கொள்ளவும்.

- இளநீர், பனை நுங்கு ஆகியவற்றை அடிக்கடி உட்கொள்வது நல்லது.

- எலுமிச்சை சாறு உங்கள் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை அளிக்கும். ஆகையால் அதை அடிக்கடி குடிப்பது நல்லது.

- தண்ணீரில் உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பதால் உடலின் நீரிழப்பு சீர் செய்யப்படும்.

- வெளியே செல்லும்போது கண்டிப்பாக குடை எடுத்துச் செல்லவும். சூரியனின் நேரடி கதிர்களின் தாக்கத்துக்கு ஆளாவது ஆபத்தாகிப் போகலாம்.

மேலும் படிக்க | சூப்பர் காய் சுரைக்காய்: சம்மரை கூலாய் கழிக்க சூப்பரா உதவும் சுரைக்காய் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News