வருமானம் அதிகரிக்கும், தடைபட்ட காரியங்கள் கைகூடும். மொத்தத்தில் நல்ல காலம் பொறந்துடுச்சு....

Guru Vakri 2024 : வக்ரகதியில் இயங்கும் வியாழன் எந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தரப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 19, 2024, 07:06 PM IST
  • 119 நாட்களுக்கு அமோகம்
  • அட்டகாசமான வாழ்க்கையை வாழப்போகும் ராசிக்காரர்கள்
  • நீங்க என்ன ராசி?
வருமானம் அதிகரிக்கும், தடைபட்ட காரியங்கள் கைகூடும். மொத்தத்தில் நல்ல காலம் பொறந்துடுச்சு.... title=

ஜாதகத்தில் குருவின் நிலை சுபமாக இருந்தால், அறிவில் சிறந்தவராக இருப்பார்கள். அதேபோல, அனைவரிடமும் மதிப்பும் மரியாதையையும் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆண்டுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் இருக்கிறார். அவர் ரிஷபத்தில் இருந்து மாறாவிட்டாலும், தனது பாதையை மாற்றி எதிர்திசையில் இயக்கத்தைத் தொடர்வார்.  2025 பிப்ரவரி 4ம் தேதி வரை கடிகார சுற்றுக்கு எதிர்திசையில் இயங்கும் வியாழன் கோள், அதன் பிறகு தனது இயல்பான இயக்கத்திற்கு திரும்புவார். 

குருவின் பிற்போக்கு திசையில் இயங்கும் காலம், சிலருக்கு அமோகமான முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்றால், சிலருக்கு மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கும். வக்ரகதியில் இயங்கும் வியாழன் எந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தரப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

119 நாட்கள் அட்டகாசமான வாழ்க்கையை வாழப்போகும் ராசிக்காரர்கள்

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு உயர்கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைக்கும். கல்யாணம் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறதே என்று வருத்தப்பட்டவர்களின் குடும்பத்தில் திருமண யோகம் வந்தாச்சு....  தொழில் செய்பவர்களுக்கு நல்ல காலம் இது. வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். எதிர்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுக்கும் காலம் இது. வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். 

மேலும் படிக்க | துலாமில் நுழையும் சுக்கிரன் யாருக்கெல்லாம் சூப்பர்? யாருக்கெல்லாம் டூப்பர்? உங்கள் ராசி என்ன?

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில், குருவின் வக்ர கதி இயக்கம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இலக்குகளில் அதிக கவனம் செலுத்த ஊக்கம் கிடைக்கும். இதனால் எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை கிடைக்கலாம். வியாபாரம் நன்றாக நடக்கும். சிக்கிய பணம் வந்து சேரும், தடைகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும், தடைபட்ட காரியங்கள் கைகூடும். மொத்தத்தில் நல்ல காலம் பொறந்துடுச்சு....

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சார கதி மாற்றம் நல்ல அதிர்ஷ்டம் தரும். அறிவும் ஆற்றலும் பெருகும், அறிவார்ந்த உங்கள் செயல்பாடுகள் உங்களுக்கு மரியாதையை பெற்றுத் தரும். எல்லா துறைகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நோய்நொடிகள், தொல்லைகள் நீங்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையின் வசந்தகாலமாக இது இருக்கும். இதுவரை இல்லாத அளவு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்றால் அதற்கு காரணம் குருவின் வக்ரகதி இயக்கம் தான். தொழில் முன்னேற்றம் ஊக்கத்தைத் தரும். வருமானம் அதிகரிக்கும், தடைபட்ட காரியங்கள் கைகூடும். வாழ்க்கையில் நிம்மதியான காலகட்டம் இது.

மேலும் படிக்க | இந்த வார ராசிபலன்: செப்டம்பர் 16 முதல் 22 வரை, 12 ராசிக்கான பலன் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News