தைரியம் இருந்தா நேர்ல வாங்கடா... கண்ணாடியை பார்த்து சண்டையிட்ட நாய்க்குட்டி!

நாய் குட்டி ஒன்று வீட்டில் இருந்த கண்ணாடியில் தனது உருவத்தை பார்த்துவிட்டு வேறொரு நாய் நிற்பதாக நினைத்துக்கொண்டு சண்டையிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.  

Written by - RK Spark | Last Updated : Nov 19, 2022, 07:55 AM IST
  • கண்ணாடியை பார்த்து சண்டையிடும் நாய்க்குட்டி.
  • எதிரே வேறு யாரோ இருக்கிறார் என்று நினைத்து சண்டையிடுகிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
தைரியம் இருந்தா நேர்ல வாங்கடா... கண்ணாடியை பார்த்து சண்டையிட்ட நாய்க்குட்டி! title=

ஆறறிவு இருக்கும் மனிதபிறவிகள் கூட சில சமயம் கண்ணாடியை கடந்து போகையில் தனது உருவத்தையே பார்த்து வேறு யாரோ என நினைத்து பதறிய நிகழ்வுகளும் உண்டு.  அப்படி நமக்கே சில சமயங்களில் கவனக்குறைவு ஏற்படும்போது ஐந்தறிவு உயிரினங்களுக்கு கண்ணாடியில் தெரிவது தனது உருவம் தான் என்பது எப்படி தெரியும், அவை மற்றொரு உயிரினம் என்று நினைத்து குழம்பி தான் போகும்.  அப்படி ஒரு நிகழ்வு தான் இங்கு இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.  பொதுவாக நாய்கள் அவை இருக்கும் இடத்தில வேறு ஏதேனும் விலங்குகள் வந்தாலே குரைத்து அவற்றை விரட்டிவிடுவதை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் இங்கு நாய் குட்டி கண்ணாடியில் தனது உருவத்தை தானே பார்த்தே வேறு நாய் என நினைத்து சண்டைக்கு தயாராகும் காட்சி இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

மேலும் படிக்க | லிப்ட்டில் சிறுவனை சரமாரியாக கடித்த நாய்: பதற வைக்கும் வீடியோ 

நாய்களின் நகைச்சுவையான இந்த வீடியோவானது யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கின்றது.  அந்த வீடியோவில், குட்டி நாய் ஒரு பெரிய கண்ணாடியை பார்த்து அமர்வதை பார்க்க முடிகிறது.  அந்த இடத்தில் நாம் இருந்திருந்தால் கண்ணாடியில் நம்முடைய அழகை கண்டு ரசித்திருப்போம் அல்லது உடைகளையோ, தலைமுடியையோ சரிசெய்து இருப்போம்.  ஆனால் அந்த நாய் கண்ணாடியில் தனது உருவத்தை பார்த்துவிட்டு எதிரே வேறொரு நாய் நிற்பதாக நினைத்துக்கொண்டு கண்ணாடிக்கு பின்புறம் சென்று பார்க்கிறது.  அங்கு யாருமில்லாமல் இருக்க மறுபடியும் வந்து கண்ணாடியை பார்க்கிறது, பின்னர் அந்த  உருவத்தை பார்த்து உரத்த குரலில் குரைக்க ஆரம்பிக்கிறது.

 

நாய் குட்டி இப்படி புரியாமல் செய்வதை பார்க்கையில் பார்ப்பதற்கு நகைச்சுவையாக தெரிகிறது, இந்த வீடியோ இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.  மேலும் இந்த வீடியோவை பல இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர் மற்றும் இதற்கு பல லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்துள்ளது.

மேலும் படிக்க | நாட்டு சரக்கை குடித்து விட்டு மட்டையான யானைகள்... படாத பாடுபட்டு எழுப்பிய வனத்துறையினர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News