இரட்டை மகள் குழந்தைகளை விற்ற மேற்குவங்க தந்தை கைது!

பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை அரிசி வியாபாரியிடம் விற்ற மேற்குவங்க ஆண் கைது செய்ய்யப்பட்டுள்ளார்!

Last Updated : Oct 29, 2018, 01:43 PM IST
இரட்டை மகள் குழந்தைகளை விற்ற மேற்குவங்க தந்தை கைது! title=

பாராசாத்: பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை அரிசி வியாபாரியிடம் விற்ற மேற்குவங்க ஆண் கைது செய்ய்யப்பட்டுள்ளார்!

மேற்குவங்க மாநிலம் பஹதூரியா பகுதியை சேர்ந்துவர் ரத்தன் பர்மா(38). பர்மா மற்றும் இவரது மனைவிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. பிறந்தது பெண் குழந்தை என்பதால் பெற்ற குழந்தைகளை அரிசி வியாபாரியிடம் விற்றுள்ளார். இந்த சம்பவம் தொரட்பாக பர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளில் ஒன்றினை ராம்சந்தப்பூர் பகுதியில் உள்ள அரிசி வியாபாரிக்கு ரூ.1 லட்சத்திற்கும் மற்றொரு குழந்தையை தக்கூர்நகர் பகுதியில் உள்ள தம்பதியருக்கு ரூ.80000-க்கும் விற்றுள்ளார். தற்போது இரண்டு குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்ட குழந்தைகள் சந்த்பாரா பகுதி அரசு மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ரத்தனிடன் விற்றதிற்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரிக்கையில் தனக்கு ஏற்கனவே 10-வயதில் பெண் குழந்தை ஒன்று இருப்பதாகவும், தற்போது மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளதால் பெற்ற குழந்தைகளை விற்றதாக தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ரத்தன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News