துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பிரதமர் மோடி ரூ.21 லட்சம் நன்கொடை!

கும்பமேளா துப்புரவுத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்குக்கு ரூ.21 லட்சம் தொகையை பிரதமர் மோடி தன்னுடைய சொந்த சேவிங்ஸ் கணக்கில் இருந்து வழங்கியுள்ளார்.

Last Updated : Mar 6, 2019, 05:34 PM IST
துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பிரதமர் மோடி ரூ.21 லட்சம் நன்கொடை! title=

கும்பமேளா துப்புரவுத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்குக்கு ரூ.21 லட்சம் தொகையை பிரதமர் மோடி தன்னுடைய சொந்த சேவிங்ஸ் கணக்கில் இருந்து வழங்கியுள்ளார்.

கடந்த பிப். 25-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கிருந்த ஏராளமான துப்புரவுத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து துப்புரவுத் தொழிலாளர்கள் 5 பேரின் பாதங்களை பிரதமர் மோடி கழுவி அவர்களை கவுரவப்படுத்தினார். இதைத் தொடர்ந்து சிறந்த சேவையாற்றிய துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தினார். 

இந்நிலையில், கும்பமேளா துப்புரவுத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்குக்கு  ரூ.21 லட்சம் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார் பிரதமர் மோடி. தன்னுடைய சொந்த சேவிங்ஸ் கணக்கில் இருந்து அவர் பணத்தை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Trending News