காஷ்மீர்: பயங்கரவாதிகள் வீசிய கையெறி குண்டால் 5 சிஆர்பிஎப் வீரர்கள் காயம்

Last Updated : Sep 26, 2016, 04:32 PM IST
காஷ்மீர்: பயங்கரவாதிகள் வீசிய கையெறி குண்டால் 5 சிஆர்பிஎப் வீரர்கள் காயம் title=

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசியதில் 5 சி.ஆர்.பி.எப் வீரர்கள் காயம் அடைந்தனர். 

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் வான்போக் பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசியுள்ளனர். கையெறி குண்டு வெடித்ததில் 5 பாதுகாப்பு படை போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து உள்ளனர். பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Trending News