Twitter India: குறை தீர்க்கும் அதிகாரியை நியமித்தது ட்விட்டர் இந்தியா நிறுவனம்

மத்திய அரசு 'டுவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் ஓ.டி.டி. (OTT) தளங்களை கட்டுப்படுத்த, புதிய விதிமுறைகளை  அமல்படுத்தியது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 11, 2021, 01:37 PM IST
  • சமூக ஊடக தளங்களுக்கு கடிவாளம் போடும் வகையில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு கடந்த அறிவித்தது.
  • ட்விட்டர் இந்தியா நிறுவனம் விதிகளுக்கு கட்டுப்படாமல், தொடர்ந்து முரண்டு பிடித்து வந்தது
  • இந்திய வரைபடத்தில் இருந்து பிரித்து காஷ்மீரை தனி நாடாகக் காட்டியது தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
Twitter India: குறை தீர்க்கும் அதிகாரியை நியமித்தது ட்விட்டர் இந்தியா நிறுவனம் title=

சமூக ஊடக தளங்களுக்கு (Social Media) கடிவாளம் போடும் வகையில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம்  அறிவித்தது. சமூக ஊடகம் மூலம் போலி செய்திகள் பரவுதல்,  வன்முறையை தூண்டும் முயற்சிகள், சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் பதிவுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த, மத்திய அரசு 'டுவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் ஓ.டி.டி. (OTT) தளங்களை கட்டுப்படுத்த, புதிய விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. 

இதன் கீழ், சமூக வலைதல பயனாளர்களின் குறைகளை தீர்க்க, உள்நாட்டு குறை தீர்ப்பு அதிகாரி மற்றும் தனி அதிகாரம் பெற்ற தொடர்பு அதிகாரி ஆகியோரை முழு நேர பணியில் நியமிக்க வேண்டும் ஆனால், ட்விட்டர் இந்தியா (Twitter India) நிறுவனம் விதிகளுக்கு கட்டுப்படாமல், தொடர்ந்து முரண்டு பிடித்து வந்தது.

ALSO READ | மேலும் சிக்கலில் ட்விட்டர்; இந்திய வரைபடத்தை தவறாக காட்டியதற்கு வழக்கு பதிவு

இந்நிலையில் ட்விட்டரில் போலி செய்தியை பரப்பி வன்முறையை தூண்ட முயற்சி செய்தது,  ட்விட்டர் தளத்தில் இந்திய வரைபடத்தில் இருந்து பிரித்து காஷ்மீரை தனி நாடாகக் காட்டியது தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கப்படாதது தொடர்பாகவும், தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ட்விட்டர் இந்தியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த வழக்கு  விசாரணையில், டுவிட்டர் இந்தியா தரப்பில், “கடந்த 2 நாட்களுக்கு முன் இடைக்கால தலைமை இணக்க அதிகாரியை நியமித்து உள்ளோம். ஜூலை 10ம் தேதி இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரியை, நியமிக்க உள்ளோம்” என கூறியது. இந்நிலையில், புதிய ஐடி விதிமுறைகளின்படி  (New IT Rules), இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியாக, வினய் பிரகாஷ் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்து உள்ளது.

முன்னதாக, மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் அமைச்சராக புதிதாக பதவியேற்ற அஸ்வினி வைஷ்ணவ், புதிய விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் இந்தியாவின் சட்டங்களுக்குதான் அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கூறினார். இந்தியாவில் வசித்து, பணிபுரியும் அனைவரும் இங்குள்ள சட்டங்களை மதித்து நடக்க வெண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் உறுதிபடக் கூறினார்.

ALSO READ | Twitter-க்கு போட்டியாக GETTR; டொனால்ட் டிரம்ப் குழுவின் புது சமூக ஊடக தளம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News