DL Update: ட்ரைவிங் லைசன்ஸ், ஆர்சி தொடர்பாக மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளை கருத்தில் கொண்டு, இந்த ஆவணங்கள் அனைத்தும் இப்போது இந்த வருடம் செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 17, 2021, 12:16 PM IST
DL Update: ட்ரைவிங் லைசன்ஸ், ஆர்சி தொடர்பாக மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு  title=

கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமம், ஆர்சி, பிட்ன்ஸ் சர்டிபிகேட் போன்ற மோட்டார் வாகனங்கள் தேவையான அனைத்து ஆவணங்களின் செல்லுபடியாகும் தன்மையின் கால அளவு கடந்த 2020 பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.  இது வரை தொடர்ந்து ஆறு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், அதன் காலக்கெடு இம்மாதம் 30ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்,  ஓட்டுநர் உரிமம், பதிவு சான்றிதழ் (ஆர்.சி), பிட்னஸ் சான்றிதழ் உள்ளிட்ட பிற மோட்டார் வாகன ஆவணங்கள் தொடர்பாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளை கருத்தில் கொண்டு, இந்த ஆவணங்கள் அனைத்தும் இப்போது இந்த வருடம் செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, இந்த ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லுபடியாகும் என அரசு அறிவித்திருந்தது.லாக்டவுன் தொடர்பாக புதுப்பிக்க முடியால் உள்ள ஆவணங்கள் இனி செப்டெம்பர் 30ம் தேதி வரை செல்லுபடியாகும். 

ALSO READ | டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

 

தற்போது, ​​உ.பி. உட்பட சில மாநிலங்களில் ஓட்டுநர் உரிமங்களை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, ஆனால் இப்போது புதிய உரிமங்களுக்கான பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. உரிமம் புதுப்பித்தல், லேனர்ஸ் உரிமம் ஆகியவற்றிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் நிலை உள்ளது. காலாவதியான மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. கொரோனா பரவல் காரணமாக,  மக்களுக்கு ஆவணங்களை புதுபிப்பதில் உள்ள பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் இந்த முடிவு  எடுத்துள்ளது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், ஓட்டுநர் உரிமம் மற்றும் மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை இந்த ஆண்டு செப்டெம்பர் 31 வரை நீட்டித்துள்ளது மக்களுக்கு பெரும் நிவாரணத்தை அளித்துள்ளது.

ALSO READ | ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News