7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு இந்த பட்ஜெட்டில் வெளியாகும் 3 முக்கிய அறிவிப்புகள்!

Budget 2024: பிப்ரவரி 1ம் தேதியான இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கலாம்.   

Written by - RK Spark | Last Updated : Feb 1, 2024, 07:08 AM IST
  • பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.
  • நீண்ட நாட்களாக சம்பள திருத்தம் கோரி வருகின்றனர்.
  • மூன்று பெரிய பரிசுகளை வழங்கலாம் என்று எதிர்பார்ப்பு.
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு இந்த பட்ஜெட்டில் வெளியாகும் 3 முக்கிய அறிவிப்புகள்! title=

Budget 2024: இந்தியாவின் இடைக்கால பட்ஜெட் 2024 தாக்கல் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஆறாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு பெரிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பான புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட கூடும். நீண்ட நாட்களாக ஊழியர்கள் சம்பள உயர்வை எதிர்பார்த்துள்ளனர். ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு, 8வது சம்பள கமிஷன் மற்றும் நிலுவையில் உள்ள 18 மாத டிஏ தொகை குறித்து இந்த பட்ஜெட்டில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க | Budget 2024: நாளை பட்ஜெட் தாக்கல், இன்றே அரசின் பரிசு.. குறைகிறது மொபைல் போன்கள் விலை

அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து அரசு ஊழியர் சங்கத்தில் பலமுறை பேசப்பட்டது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தினால், ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும்.  மத்திய அரசு இந்த 2024 இடைக்கால பட்ஜெட்டில் 8வது ஊதியக் குழுவை அறிவிக்கலாம். இதன் மூலம், அரசு ஊழியர்களின் சம்பளமும் உயரும். இருப்பினும், எட்டாவது ஊதியக் குழுவை கொண்டு வருவது குறித்து தற்போது பரிசீலிக்கவில்லை என்று மத்திய அரசு முன்பு கூறி இருந்தாலும், இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் ஊழியர்களின் கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்படும்.

மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களின் டிஏவை உயர்த்துகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக, அரசு 2020 ஜனவரி முதல் ஜூன் 2021 வரை அகவிலைப்படியில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. பின்பு, அரசாங்கம் ஜூலை 1, 2021 முதல் நேரடியாக 11 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தியது. இதற்கு முன்பு, டிஏ மூன்று முறை அதிகரிக்கப்படவில்லை. பின்பு, இந்த 18 மாத டிஏ நிலுவைத் தொகையை அரசிடம் இருந்து பெற ஊழியர்கள் பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும், இந்த 18 மாத நிலுவை தொகையை வழங்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று முன்பே கூறியது குறிப்பிடத்தக்கது. 

டிஏ உயர்வு 

கடந்த முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்தது. இந்த உயர்வானது ஜூலை 2023 முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், அடுத்த அகவிலைப்படி உயர்வு இந்த ஆண்டு அறிவிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு போலவே அடுத்த அதிகரிப்பும் 4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்க நிலைமை மற்றும் AICPI-IW புள்ளிவிவரங்கள் வந்துள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மத்திய அரசு அகவிலைப்படி அதிகரித்தால் அரசு ஊழியர்கள் 46% அகவிலைப்படியை பெறலாம். 

மேலும் படிக்க | பட்ஜெட் 2024... மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட், பல சலுகைகளை பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News