இஸ்ரேல் எல்லையில் துப்பாக்கி சூடு: 4 பாலஸ்தீனியர்கள் பலி!

இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

Last Updated : Mar 31, 2019, 08:34 AM IST
இஸ்ரேல் எல்லையில் துப்பாக்கி சூடு: 4 பாலஸ்தீனியர்கள் பலி! title=

இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

கடந்த வருடம் அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை ஜெருசலேம் நகருக்கு இடம் மாற்றியது. இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதில் கடந்த மே 14ம் 
தேதி 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இந்த போராட்டத்தின் முதலாம் ஆண்டு தினத்தினை முன்னிட்டு பாலஸ்தீனியர்கள் ஆயிரக்கணக்கில் இஸ்ரேல் மற்றும் காசா எல்லை பகுதியில் இன்று ஒன்றுகூடினர். போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனிய இளைஞர்களில் சிலர் இஸ்ரேல் ராணுவம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் 316 பேர் காயமடைந்தனர். போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

Trending News