போர்க்களத்தில் ரஷ்யா கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், ரஷ்ய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஆர்வலர்களுக்கு கடுமையான எச்சைக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து 20-25% தள்ளுபடி விலையில் வாங்குவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது எரிபொருள் விலை உயர்வு என்றால் மிகையில்லை.
ரஷ்யாவின் தாக்குதல்கள் உக்ரைனில் அழிவை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்காவில் ஒரு மருந்து விற்பனை இது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த மருந்தின் பெயர் பொட்டாசியம் அயோடைட்.
ஊரடங்கு காலத்தில், வெடிகுண்டு தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு செல்வதற்கு மட்டுமே மக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
ரஷ்யாவில் இன்ஸ்டாகிராமுக்குத் விதிக்கப்பட்டுள்ள தடையால், அந்நாட்டில் இன்று முதல் சுமார் 8 கோடி வாடிக்கையாளர்கள் இணைப்பை இழந்துவிடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய விமானிகள் சராசரியாக ஒரு நாளைக்கு 200 குண்டுகளை வீசுவதாக ஒரு அறிக்கை கூறும் நிலையில், இதுவரை 12,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை கொன்றுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ரஷ்யா உக்ரைனுக்குள் துருப்புக்களை நகர்த்தத் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் உள்ள உயிரியல் ஆய்வகங்கள் குறித்த பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன.
சர்வதேசத் தலைவர்களும் உக்ரைனும் ரஷ்யாவை குழந்தைகள் மருத்துவமனை மீது "காட்டுமிராண்டித்தனமான" தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டினர், மாஸ்கோவின் படையெடுப்பிற்கு இரண்டு வாரங்களுக்குள் மோதல்களின் சுமைகளைக் காட்டும் புகைப்படங்கள் இவை...
முன்னதாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைன் தனது பிராந்தியத்தில் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்க தடைகளை அறிவித்துள்ளது. இருப்பினும், ஐரோப்பாவின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் இந்த முயற்சியில் அமெரிக்காவும் பெரிதும் பாதிக்கப்படும் என்று அதிபர் பிடன் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடி, இந்தியர்களை வெளியேற்றுவதற்கு உதவியதற்கு நன்றி தெரிவித்தார்.
உக்ரைன் தலைநகர் கீவ்வை மாஸ்கோ கைப்பற்றுவதற்கு உதவ, நகர்ப்புறப் போரில் தேர்ச்சி பெற்றச் சிரியர்களை ரஷ்யா ஈடுபடுத்துகிறது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதலை நிறுத்த, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பேச்சு வார்த்தை நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.