பாதிக்கப்பட்டவர்களின் குரலாக இருப்பதில் சமூக ஊடகங்கள் மிக முக்கிய பங்கு வகித்தாலும், சில சமயங்களில், வன்முறையை தூண்டும் பதிவுகள், சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் பதிவுகளுக்கான தளமாகவும் அமைந்துவிடுகிறது
உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் மீது நீட் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்ய குழுவை தமிழக அரசு அமைக்க முடியாது என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
கோவிட் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மத்திய விஸ்டா கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது...
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது, பல இடங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ வாரியங்கள் சமீபத்தில் பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக எடுத்த முடிவைத் தொடர்ந்து, நாட்டின் பல மாநில கல்வி வாரியங்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்தன. ஆனால், ஆந்திர மற்றும் கேரள கல்வி வாரியங்கள் பொதுத் தேர்வுகளை ரத்து செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியதை அடுத்து, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் சென்ற மாதம் அறிவித்தது.
கொரோனாவின் தாக்கத்தால், ஆக்சிஜன் தேவை திடீரென்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பலர் உயிரிழந்த சம்பவங்களும் வெளிவந்தன.
நாடு முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜனின் ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை கண்காணிக்க உச்சநீதிமன்றம் சனிக்கிழமை (மே 8, 2021) ஒரு தேசிய அளவிலான பணிக்குழுவை அமைத்தது.
சிறையில் தொற்று பரவுவதை தடுக்க உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவுகளை பிறப்பித்தது. தொற்றுநோயைக் கருத்தில்கொண்டு கடந்த ஆண்டு ஜாமீன் அல்லது பரோல் வழங்கப்பட்ட கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மராத்தா சமூகத்திற்கு 50 சதவீதத்திற்கும் மேலான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தெளிவுபடுத்திய உச்ச நீதிமன்றம், பொதுக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு அளிக்கும் செப்சி சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிமன்றம் கருதுகிறது. அதனால் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு வழங்கிய மகாராஷ்டிரா அரசின் சட்டம் செல்லாது என அதிரடியாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை 3.92 லட்சம் பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.95 கோடிக்கு மேல் உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறப்பது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தியும் பண்டாரம்பட்டி கிராம மக்கள் சார்பாக இன்று கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.
மறைமுகமாக, குறுக்குவழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, தமிழ்நாடு அரசு வழி செய்து விட்டது. இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்: வைகோ அறிக்கை.
உச்சநீதிமன்ற வளாகத்தில், கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்ய தற்போது உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் படுக்கை வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவும், RT-PCR போன்ற கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா அனுமதி அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.