சில மாநில அரசுகள் விதித்துள்ள நிபந்தனைகளில், தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு பொது இடங்களுக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும் நிலையில், தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றம் எடுத்துரைத்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடைபெற்ற விவசாயிகள் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரைக்கும், சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி, நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கான 20 சதவீதத்தில் வன்னியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சாதகமானது என்றும், விரைவில் எட்டிவிடும் தொலைவிலேயே 10.50% உள் இட ஒதுக்கீடு உள்ளதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில், கடந்த மாதம் உடுப்பி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வர தொடங்கினர். இது சீருடை விதியை மீறும் செயல் என பள்ளி நிர்வாகம், இவர்களை வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்காததை அடுத்து ஹிஜாப் சர்ச்சை தொடங்கியது.
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என்ற கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பேரறிவாளன் ஜாமீன் குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கால்நூற்றாண்டு சட்டப்போராட்டத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் தொடர்பான மனு மீதான விசாரணையை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், 'போரை நிறுத்த புடினுக்கு உத்தரவிட முடியுமா?' என மனுதாரரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
கர்நாடகாவின் ஷிவமொகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பேஸ்புக்கில் பதிவு எழுதியதற்காக 26 வயது இந்து வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.