முன்னாள் முதல்வர் ஜெ., அவர்களின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் 86 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது!
ஜெயலலிதா படத்துடன் கூடிய கொடியை தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பயன்படுத்தகூடாது என தடைவிதிக்க கோரிய மனுவானது அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது!
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 110-வது தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இன்று தேவரின் குருபூஜை நடைபெற்றது. இன்று காலை மதுரை வந்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 110-வது தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதலைமைச்சர், துணை முதலைமைச்சர் அஞ்சலி செலுத்தினர்.
பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவரின் 110-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இன்று தேவரின் குருபூஜை நடைபெற்றது. இன்று காலை மதுரை வந்த முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இவர்களுடன் தமிழக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் நடராஜன் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
தமிழக அரசியலில் பரப்பரப்பான சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து சென்னை வந்தார். இந்நிலையில், தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னால் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் சந்தித்து கைக்குலுக்கினர். அதிமுக அணிகள் இணைந்தன என அறிவிக்கப்பட்டது.
அதிமுக வழி காட்டுதல் குழுவில் 11 பேர் நியமிக்கப்பட்டனர். ஓ. பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் எனக் தெரிவிக்கப்பட்டது.
திருவாரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மற்றும் அதிமுக புரட்சிதலைவி அம்மா அணியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம்:-
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரகசிய கூட்டணி அமைத்துள்ளார். அனைத்துத் தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவு எங்களுக்குதான் உள்ளது. நான் எவ்வளவோ முதல்வர்களை பார்த்துள்ளேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி போல யாரையும் பார்த்ததில்லை.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். இந்த அவசர ஆலோசனையை தொடர்ந்து அமைச்சர்கள் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.
முன்னதாக இரு அணியாக இருக்கும் அதிமுக மீண்டும் இணைய வேண்டுமென்றால் தினகரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பன்னீர்செல்வம் அணி முன்வைத்தது. இதற்கு எடப்பாடி அணியும் ஒப்புக்கொண்டது.
தற்போது ஜாமீனில் வெளிவந்த தினகரன் இன்று, பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்திக்கச் சென்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.