எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டன. இதில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. கடலில் கலந்துள்ள எண்ணெய் கசடை நீக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ள பகுதியை தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசைக் கண்டித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் என்றும் தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 70-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. மெரினாவில் காந்தியின் திருவுருவப் படத்துக்கு தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் போராட்டம் முடிவடையும் நிலையில் போலீசாருடன் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து வன்முறை சம்பவங்கள் நடந்தன.
இன்று தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் மாலை கூடியது.
சட்டசபை சிறப்பு கூட்டத்தில் அவசர சட்டத்தின் சட்ட முன் வடிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கார்த்திகேய சிவசேனாதிபதி, ராஜேஷ், ராஜசேகரன், ஆதி, அம்பலத்தரசு, மாணவ பிரதிநிதிகள் ஐந்து பேர், நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்ட முன்வடிவை முதல்- அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்மொழிய, சபாநாயகர் தனபால், ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். இதையடுத்து, சட்டப்பேரவையில் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், ஜல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் உருவாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மெரினா மற்றும் மதுரையில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என அவர்கள் தெரிவித்துள்ளனர். மதுரை போராட்டக்களத்தில் இருந்த ஒரு பெண் கூறுகையில்; எங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், இந்த பொங்கலை சிறப்பாக கொண்டாட போவதாகவும் இது மிக மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு வசதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாகவும், ஓரிரு நாளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுவதால் பயிர்கள் கருகி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வறட்சியால் பயிர்கள் கருகியதைப் பார்த்து மனவேதனை அடைந்த பல விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போன விரக்தியில் தற்கொலை செய்துள்ளனர்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தலைமை செயலகத்தில் துவங்கியது.
முதலமைச்சர் திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
— AIADMK (@AIADMKOfficial) January 4, 2017
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று சிறைபிடித்தது. இவர்களையும் சேர்த்து இலங்கை சிறையில் மொத்தம் 22 தமிழக மீனவர்கள் உள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாராளுமன்ற வளாகத்தில் சிலை வைக்கவேண்டும் மற்றும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் இன்று முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் கோரிக்கை விடுப்பார் என்று தகவல் வெளியாகிள்ளது.
முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்திக்க இருக்கிறார். மறைந்த ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு வெண்கலச் சிலை நிறுவ வேண்டும் என்றும் கோரிக்கைவிடுக்கப்பட உள்ளதாம்.
அதிமுக ஆட்சிக்கும் சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்ற போஸ்டர்களால் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இரவு 11-30 மணி அளவில் மரணமடைந்தார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது அதிமுகவில் அடுத்த தலைமை யார் வாசிப்பார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுப்ப படுகின்றன.
முதல்வர் ஜெயலலிதாவின் இலாக்காக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மாற்றப்பட்டப் பிறகு இன்று முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவிரி நீர் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 22-ம் தேதி முதல் ஜெயலலிதாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் அவரது வசம் இருந்த நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டன.
நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் நாளை காலை அமைச்சரவை கூட்டம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
இன்று தலைமை செயலகத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம், இடைப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
காவிரி விவகாரம் தொடர்பாக இந்த ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பொதுப்பணித்துறை அமைச்சரும், ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் வந்தனர். சுமார் 15 நிமிடம் ஆலோசனை நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.