ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளை செலுத்தி இறக்குமதி செய்த மணலுக்கு, விற்பனை செய்ய அனுமதி மறுப்பது ஏன் என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், மணலை விற்க தடை விதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
இன்று அசாமில் நடைபெற்ற 23_வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 177-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு.
கடந்த ஜூலை 1-ம் தேதி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமுல்படுத்தியது மத்திய அரசு. ஆனால் எதிர்கட்சிகள் ஜி.எஸ்.டி குறித்து விமர்சித்து வந்தனர். சில பொருட்களுக்கு வரி அதிகமாக இருப்பதாகவும், அதைக் குறைக்க வேண்டும் எனவும் பலதரப்பினர் போரட்டம்மும் நடத்தினர்.
நாடு முழுவதும் ஒரே விதமான சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரியை ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தியது மத்திய அரசு. இந்த வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்ததும், ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் 94,063 கோடி ரூபாயும், ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் 90,669 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்தது.
இந்நிலையில் செப்டம்பர் மாதம் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.92 கோடி கிடைத்துள்ளதாகவும், 42.91 லட்சம் பேர் வரி செலுத்தி உள்ளனர் எனவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-
"நாம் 28% ஜி.எஸ்.டி செலுத்துகிறோம், இந்நிலையில் உள்ளூர் பொழுதுபோக்கு வரி விதிக்கப்படக் கூடாது. முந்தைய வரி விதிப்பை விட இது அதிகமாகவே உள்ளது. இது நாட்டின் ஒருன்பான்மைக்கு புரம்பானது"- தீபக் ஆஷர், இந்திய மல்டிலெக்ஸ் அசோஸியேஷன் தலைவர்.
தமிழக சினிமா ரசிகர்கள் தற்போது, ஜி.எஸ்.டி மற்றும் உள்ளூர் வரிகளின் என இரட்டை வரிகளால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் திரையரங்குகளுக்கு சென்று திரைப்படங்களை கானும் ஆசை ரசிகர்களின் மத்தியில் பகல் கனவாகவே மாறி வருகிறது எனலாம்!
இரண்டு நாள் பயனமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் பயணம் மேற்கொண்டார். இந்த பயனத்தில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதன்படி குஜராத் மாநிலம், பழைய துவாரகா மற்றும் புதிய துவாரகா நகரை இணைக்கும் வகையில் 2.32 கிலோமீட்டர் நீளத்துக்கு தொங்கும் பாலம் அமைக்கும் திட்டத்திற்கு அடிகல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மோடி தெரிவித்ததாவது,
21_வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் மாநிலத்தை சேர்ந்த நிதியமைச்சர் மற்றும் மத்திய, மாநில உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி குறித்து விவாதிக்கப்பட்டன. பிறகு அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது.
இதனால் தினமும் மக்களால் பயன்படுத்தப்படும் 40 பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முழுமையான விவரங்கள்:-
நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை கடந்த ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு நாடு முழுவதும் 87 லட்சம் ஜிஎஸ்டி இணையத்தில் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஜிஎஸ்டி தொடர்பாக டெல்லியில் அருண் ஜெட்லி கூறியது:-
ஜிஎஸ்டி வரியால் 91,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92,000 கோடி ரூபாய் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது.
நாளை சுதந்திர தின விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம். சுதந்திர தின நாளில் அவர்களை நாம் போற்றுவோம். நம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் தான் நாம் முன்னேறுவதற்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள்.
அரசாங்கம் சட்டங்களை உருவாக்கவும், செயல்படுத்தவும், வலுப்படுத்தவும் முடியும். ஆனால் அனைவருக்கும் சட்டத்தின் முன் கடமைப்பட்டிருப்பது தான் கடமை.
கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே வரி வசூலிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அமல்படுத்தியது.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரி தொடர்பான விளக்கக்கூட்டம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு தொழில் வர்த்தக சங்கங்களின் நிர்வாகிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியது:-
ஜிஎஸ்டி குறித்து நல்ல செய்தி வந்த வண்ணம் உள்ளது. இந்த வரி குறித்து மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. ஜிஎஸ்டி பலன்கள் தெளிவாக உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியுள்ளது.
இன்று முதல் தியேட்டர்கள் வழக்கம்போல் செயல்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
தியேட்டர்களுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி குறித்து, திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அரசின் முடிவை ஏற்றுக் கொண்டனர் திரையரங்கு உரிமையாளர்கள். இதனையடுத்து, இன்று காலை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு விதித்துள்ள 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த 3-ம் தேதி முதல் திரையங்குகளை மூடி போராட்டம் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 1-ம் தேதி முதல் ஒரே நாடு! ஒரே வரி! விதிப்பு முறையான ஜிஎஸ்டி வரி நடைமுறை அமலுக்கு வந்தது.
இதையடுத்து ஒரே வரி விதிப்புக்கான நடைமுறைகளை மாநில அரசுகள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.
அதன் ஒரு பகுதியாக மாநில எல்லைகளில் உள்ள வணிக வரி சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிமுகமான முதலே தமிழ்நாடு - கேரளா, தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுவரை நூற்றுக்கணக்கான சோதனை சாவடிகள் தங்களது தினசரி பணியை நிறுத்தி விட்டன.
கேளிக்கை வரிக்கு எதிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அபிராமி ராமநாதன் தலைமையிலான திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று நிதி அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்தனர்.
இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்:-
’திரையரங்கங்களுக்கான கேளிக்கை வரியை குறைப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.
ஜிஎஸ்டி தொடர்பான தவறான புரிதல்களுக்கு மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா டிவிட்டரில் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜிஎஸ்டி தொடர்பாக மக்களிடையே உள்ள தவறான புரிதல்கள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்களை ஹஷ்முக் ஆதியா அளித்துள்ளார்.
MYTHS & REALITIES on #GST
by Revenue Sec Shri @adhia03
Find Here pic.twitter.com/7WFPRvWZW3
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.