திருவண்ணாமலையில் அரசு பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து..! பயணிகளுக்கு படுகாயம்!

Tiruvannamalai Government Bus Accident: திருவண்ணாமலையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணித்த 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Aug 5, 2023, 09:57 AM IST
  • திருவண்ணாமலையில் இன்று காலை அரசு பேருந்து விபத்து.
  • 15 பேருக்கு படுகாயம்.
  • நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு பலத்த அடி.
திருவண்ணாமலையில் அரசு பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து..! பயணிகளுக்கு படுகாயம்! title=

திருவண்ணாமலை: சேலம் மாவட்டத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று இன்ரு அதிகாலை விபத்துக்குள்ளானது. இதில் 30 பேர் பயணித்துக்கொண்டிருந்தனர். 

அரசு பஸ் விபத்து: 

சேலம் மாவட்டத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு அரசு பஸ் ஒன்று இன்று திருவண்ணாமலை சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30 பேர் பயணித்து கொண்டிருந்தனர். திருவண்ணாமலையை அடுத்து உள்ள அத்தியந்தல் எனும் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, அப்பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது. இதையடுத்து, அந்த பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது ஏறி அதன் எதிரே இருந்த புளிய மரத்தின் மோதியுள்ளது. இதனால், அந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ’நீதி வென்றுள்ளது’ ராகுல் காந்தி வழக்கின் தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரியாக்ஷன்

15 பேர் படுகாயம்:

திருவண்ணாமலை அருகே நடந்த இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உள்பட மொத்தம் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு திருவண்னாமலை அரசு மருத்துவமனைக்கு சிகைச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி யாரும் இந்த விபத்தில் பலி ஆகவில்லை என கூறப்படுகிறது.

போலீஸார் வழக்குப்பதிவு:

திருவண்ணாமலை அத்தியந்தல் எனும் கிராமத்திற்கு அருகே உள்ள தேசிய சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. சம்பவம் நடந்தவுடன் அருகில் இருந்தவர்களும் போலீஸாரும் ஆம்புலன்ஸ்களை வரவைத்ததால் விபத்தில் சிக்கிய அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த அரசு பேருந்து விபத்து திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | ‘சர்’ரென சரிந்தது தக்காளியின் விலை..! ஒரு கிலோ இவ்ளோதானா? மகிழ்ச்சியில் மக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News