மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளுக்கு தமிழிசை சௌந்தராஜன் அஞ்சலி

Last Updated : Nov 2, 2017, 08:40 PM IST
மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளுக்கு தமிழிசை சௌந்தராஜன் அஞ்சலி title=

சென்னை கொடுங்கையூரில் சாலையில் கனமழையால் காரணமாக வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதில், அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கியதில் இரு சிறுமிகள் (யுவஸ்ரீ, பாவனா) உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகள் யுவஸ்ரீ மற்றும் பாவனாவுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

Trending News