திமுக அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஜூன் 19 மீண்டும் விசாரணை

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை ஜூன் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 12, 2024, 05:51 PM IST
  • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு
  • ஜூன் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு
  • அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகவில்லை
திமுக அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஜூன் 19  மீண்டும் விசாரணை title=

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளவுக்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதால் இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை தங்களையும் ஒரு சாட்சியாக இணைக்க வேண்டும் என மனு செய்துள்ளது. 

மேலும் படிக்க | அரசு பள்ளி அருகே அமர்க்களமாய் களைகட்டும் டாஸ்மாக் பார்: அவதியில் மாணவர்கள்

அமைச்சர் ஆஜராகவில்லை

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த்து. அப்போது வழக்கு விசாரணைக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜராகவில்லை. அவரது மகன்கள் ஆனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் மற்றும் அமைச்சரின் தம்பி சண்முகநாதன் ஆகிய நான்கு பேர் ஆஜராகினர். இந்த வழக்கில் அரசு தரப்பு 16-வது சாட்சியை மறு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும், மேலும் வழக்கு தொடர்பான சில ஆவணங்களில் குறியீடு செய்ய வேண்டுமென என அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு சார்பில் இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜூன் 19 ஆம் தேதி விசாரணை

இதைத்தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை வைத்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு இன்று அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் யாரும் ஆஜராகாத நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கறிஞர் ஆஜராகி இருந்தார். இதைத் தொடர்ந்து வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி ஐயப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மனு மீதான உத்தரவு வருகிற ஜூன் 19ஆம் தேதி வரும் வாய்தாவில் பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

செந்தில் பாலாஜி இன்னும் சிறையில்

ஏற்கனவே திமுக அமைச்சரவையில் இடம்பிடித்திருந்த செந்தில் பாலாஜி வேலை வாய்ப்பு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். கிட்டதட்ட 10 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தும், பிணை கிடைக்கவில்லை. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக சிறையில் இருந்து வெளியே வந்துவிடலாம் என எண்ணிக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் பாஜக ஆட்சியே வந்திருக்கிறது. இதனால் அவருக்கு பிணை கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த சூழலில் தான் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | மத்திய அரசை எதிர்க்கும் பாமக? அன்புமணி ராமதாஸ் பேட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News