கார் ஓட்டி பழகும்போது நடந்த விபரீதம்... இரு சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு

கபிலர்மலையில் இரவு நேரத்தில் வாகனம் ஓட்டி பழகும் போது விபத்து ஏற்பட்டு இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jun 11, 2024, 12:35 PM IST
  • பரமத்தி வேலூர் அருகே கார் ஓட்டி பழகும் போது விபரீதம்.
  • ஆம்னி வேன் மீது பார்ச்சூனூர் கார் பயங்கர மோதல்.
  • இரு சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு.
கார் ஓட்டி பழகும்போது நடந்த விபரீதம்... இரு சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு title=

பரமத்தி வேலூர் அருகே கார் ஓட்டி பழகிய சிறுவர்கள் சாலையில் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது, இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து ஏற்பட்டது எப்படி? இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அடுத்த பெரியமருதூர் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சுதர்சனம் (14). இதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் லோகேஷ் (17). இவர்கள் இருவரும் லோகேஷின் தந்தை ராமசாமியின் ஆம்னி வேனை எடுத்துக்கொண்டு நேற்று இரவு 11 மணிக்கு கபிலர்மலை - பரமத்தி சாலையில் கார் ஓட்டி பழகியதாக கூறப்படுகின்றது. 

ஆம்னி வேனை சுதர்சனம் ஒட்டிய நிலையில் பரமத்தியில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த டொயோட்டோ பார்ச்சூனூர் காரை இருக்கூரை சேர்ந்த விக்‌னேஷ் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது சாலையின் குறுக்கே வந்த ஆம்னி வேன் மீது பார்ச்சூனூர் கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி வேன் சுக்குநூறாக நொறுங்கி அதிலிருந்த சுதர்சனம், லோகேஷ் ஆகிய சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படிக்க | தருமபுர ஆதீனத்தை மிரட்டிய வழக்கு... முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த ஜேடர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த இரு சிறுவர்களின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக பரமத்தி வேலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கபிலர்மலையில் இரவு நேரத்தில் வாகனம் ஓட்டி பழகும் போது விபத்து ஏற்பட்டு இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாகனம் ஓட்டுவதற்கான சட்டப்பூர்வமான வயது வரும் வரை, சிறுவர், சிறுமியரை இதற்கு அனுபதிப்பது தவறு. பெற்றோர் இதில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. மேலும், இந்த வயதை எட்டினாலும், வாகனம் ஓட்ட கற்கும் போது, வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்த பெரியவர்களோ, அல்லது வாகனம் ஓட்ட பயில்விக்கும் பயிற்சியாளர்களோ உடன் இருப்பது மிக முக்கியம் ஆகும்.

மேலும் படிக்க | தமிழிசைக்கு சவால் விட்ட திருச்சி சூர்யா! பாஜகவில் இருந்து விலகுகிறேன் - பரபரப்பு பேட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News