வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 4, 2019, 12:42 PM IST
வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு title=

தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.  ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.

என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்தார்.

Trending News