முகக்கவசம் அணியாவிட்டால் ஏப்ரல் 10 முதல் பெட்ரோல் டீசல் கிடையாது: பெட்ரோலிய வணிகர் சங்கம்

பெட்ரோல், டீசல் போட வாகனங்களில் வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனங்களுக்கு பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களால் தொற்று பரவும் அபாயத்தை குறைக்க முடியும் என  பெட்ரோலிய வணிகர் சங்கம் நம்புகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 9, 2021, 10:25 AM IST
  • முகக்கவசம் அணியவில்லை என்றால் பெட்ரோல் டீசல் கிடைக்காது.
  • பெட்ரோலிய வணிகர் சங்கம் இந்த அறிவிப்பை அளித்துள்ளது.
  • கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பலவித கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
முகக்கவசம் அணியாவிட்டால் ஏப்ரல் 10 முதல் பெட்ரோல் டீசல் கிடையாது: பெட்ரோலிய வணிகர் சங்கம் title=

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வீறியத்துடன் வீசிக்கொண்டிருக்கின்றது. தமிழகத்திலும் ஒற்றை நாள் தொற்றின் எண்ணிக்கி கணிசமாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், தமிழக அரசு பலவித கட்டுப்பாடுகளை நேற்று அறிவித்தது. இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 10 முதல் தொடங்கி ஏப்ரல் 30 ஆம் தெதி வரை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு (Coronavirus) எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் பல துறைகள் தங்கள் தரப்பில் பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன. பெட்ரோல், டீசல் வாங்க வருபவர்கள், முகக்கவசம் அணிந்து வராவிட்டால், பெட்ரோல் டீசல் விநியோகம் செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக பெட்ரோலிய வணிகர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் (Petrol), டீசல் போட வாகனங்களில் வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனங்களுக்கு பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களால் தொற்று பரவும் அபாயத்தை குறைக்க முடியும் என  பெட்ரோலிய வணிகர் சங்கம் நம்புகிறது. 

ALSO READ: Lockdown தேவையில்லை, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்- பிரதமர் மோடி

வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் டீசல் வாங்குவது அத்தியாவசியமான ஒரு விஷயமாக இருப்பதால், இதை காரணம் காட்டி முகக்கவசம் அணியும் வழக்கத்தை கட்டாயப்படுத்த வணிகர் சங்கம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, புதிய கட்டுப்பாடுகளின் படி எவையெல்லாம் அனுமதிக்கப்படும், எவற்றுக்கு அனுமதி இல்லை என்பது பற்றிய அறிக்கையை நேற்று தமிழக (Tamil Nadu) அரசு வெளியிட்டது. 

அனைத்து மத நிகழ்வுகளும், திருவிழா கூட்டங்களும் அடுத்த உத்தரவு வரும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன. இருப்பினும், வழிபாட்டுத் தலங்கள் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளும் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். ஆனால் 50 சதவீத வாடிக்கையாளர் திறனில் மட்டுமே இவற்றை இயக்க முடியும். 

மல்டிபிளக்சில் உள்ள திரையரங்குகள், பொழுதுபோக்கு கிளப்புகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், விலங்கியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கான மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

சமூக, அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் உட்புற அரங்குகளில் அதிகபட்சமாக 200 பேர் மட்டுமே இருக்க முடியும்.

வெளிப்புற அரங்கங்களில் நிகழ்வுகள் நடத்த அரசாங்கம் அனுமதித்துள்ளது. ஆனால் இந்த நிகழ்வுகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இருக்காது. 

நீச்சல் குளங்களை விளையாட்டு பயிற்சி நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த முடியும்.

திருமண விழாக்களில் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இறுதிச் சடங்குகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு.

வணிக நோக்கத்துக்காக மட்டுமே கண்காட்சி அரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும். 

பொது போக்குவரத்தின் இயக்கம் வழக்கம் போல் இருக்கும் என்றாலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். சென்னையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் எம்டிசி பேருந்துகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும். 

ALSO READ: ஒரே மருத்துவமனையில் பணியாற்றும் 37 டாக்டர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News