காவல் உதவி ஆய்வாளர் மீது கார் மோதி விட்டு தப்பி ஓடிய பிரபல சாராய வியாபாரி!

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி  ஆய்வாளர் மீது கார் மோதிவிட்டு தப்பி ஓட்டம் மற்றொரு உதவி ஆய்வாளர் படுகாயம்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : Dec 23, 2021, 02:19 PM IST
காவல் உதவி ஆய்வாளர் மீது கார் மோதி விட்டு தப்பி ஓடிய பிரபல சாராய வியாபாரி! title=

நாகப்பட்டினம் செய்திகள்: நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த பிரபல சாராய வியாபாரி ஒருவர்  TN 20 EE 4779 என்ற எண் உள்ள வெள்ளை நிற ஸ்கார்பியோ காரில் திருச்சியை நோக்கி வருவதாகவும், அந்த காரில் வருபவர்களை மறித்து, மடக்கி பிடிக்க திருச்சி மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர் அலுவலகத்து வந்த தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்டம் துவாக்குடி போலீசார் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

நாகை மாவட்டத்தில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த அந்த காரை தடுத்து நிறுத்தினர். அப்போது சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்தும் இடத்தில் கட்டணம் செலுத்துவது போல் அந்த கார் மெதுவாக நின்று பின்னர் தடுப்பை உடைத்து சென்றது. அப்போது காரின் அருகில் விசாரணையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மீது கார் மோதி அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதன்பின் அதேப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்த மற்றொரு உதவி ஆய்வாளர் சுரேஷ் மீது கார் இடித்து தள்ளிய பேரிகார்டு மோதி காயமடைந்துள்ளார்.

இந்த காட்சிகள் சுங்கச் சாவடியில் இருந்த வாகனத்தை கண்காணிக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்து துவாக்குடி போலீசார் திருச்சி மாநகர போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் திருச்சி நோக்கி வரும் அந்த காரை தடுத்து நிறுத்த திருச்சி மாநகர காவல் துறையினர் பல்வேறு பகுதிகளிலும் தயாராக இருந்தனர். ஆனால் காவல் உதவியாளர்களை இடித்து விட்டு வந்த கார் திருச்சி மாநகர எல்லைக்குள் வரவில்லை. காவல்துறையினர் தங்களை விரட்டி வருவார்கள் என்பதை அறிந்த அந்த நபர்கள் மாநகர பகுதிக்குள் வராமல் வேறு வழியில் தப்பிச் சென்று விட்டனர். 

அவர்கள் எந்த வழியில் தப்பிச் சென்றனர் என்பது குறித்து மாநகர போலீசார் விசாரணை செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல் உதவியாளர் பூமிநாதனை ஆடு திருடும் கும்பல் வெட்டி படுகொலை செய்த நிலையில், தற்போது அதிக சிசிடிவி கண்காணிப்புடன் இருக்கும் சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே காவல் உதவியாளரை கார் மூலம் இடித்து தள்ளிவிட்டு தப்பிச்சன்ற சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News