செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகை

உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதனை செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 16, 2023, 11:04 AM IST
  • செந்தில் பாலாஜி வழக்கில் அடுத்த திருப்பம்
  • அமலாக்கத்துறை எடுத்திருக்கும் அதிரடி முடிவு
  • டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை வருகை
செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகை title=

செந்தில் பாலாஜி கைது

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை, 18 மணி நேர சோதனைக்குப் பிறகு விசாரணைக்காக டெல்லி அழைத்துச் செல்ல முயற்சித்தனர். ஆனால் அதற்குள் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவசரமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை கைது செய்ததாக அறிவித்த அமலாக்கத்துறை, மருத்துவமனையில் சிஆர்பிஎப் பாதுகாப்பு போட்டு தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கு இடையே உரிமை சார்ந்த பிரச்சனையாக மாறியது. 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டம் நிறைவேறுமா - நாளை உத்தரவு வெளியாகும்!

உடல்நிலை பாதிப்பு

செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் கைதுக்கு தேசிய அளவில் இருக்கும் எதிர்கட்சிகள் கண்டித்ததுடன், மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சி மாநிலங்களில் விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினர். இப்போது 15 நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனையில் இருக்கும் அவசர பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவர்கள், தேவைக்கு ஏற்ப அடுத்தக்கட்ட சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளர். 

எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகை

இதனிடையே, அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.   இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை விரும்பினால் அவர்கள் முடிவு செய்யும் மருத்துவ நிபுணர்கள் குழு செந்தில் பாலாஜியை பரிசோதிக்கலாம். அவரது உடல்நிலையை, சிகிச்சையை ஆராயலாம் என உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவைத் தொடர்ந்து சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை ஆய்வு செய்ய மத்திய மருத்துவக் குழுவான எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவக்குழு இன்று சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி இலக்கா மாற்றம்... அரசுக்கு மீண்டும் கொடைச்சல் கொடுக்கிறாரா ஆளுநர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News