சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டம்: டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு.!!

Last Updated : Jun 18, 2017, 02:43 PM IST
சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டம்: டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு.!! title=

டாஸ் வென்ற இந்தியா அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

உலகமே எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்கிறது. 

கடந்த 1-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிய ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று நடக்கும் இறுதி போட்டியுடன் முடிவடைகிறது.

இந்திய அணி 2002-ம், 2013-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது. தற்போது 3-வது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. ஏற்கனவே ‘லீக்‘ போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி இருப்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.

பாகிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் விளையாட உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் முதல் முறையாக இறுதிப்போட்டியில் மோதுவதால் இன்றைய போட்டி அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News