எது ஆபாசம்? வகுப்பெடுத்த சாய்பல்லவி - வைரலாகும் வீடியோ

ஆபாசம் குறித்து நடிகை சாய்பல்லவி கொடுத்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 12, 2022, 01:39 PM IST
  • சாய்பல்லவியின் கார்கி திரைப்படம்
  • ஜூலை 15 ஆம் தேதி ரிலீஸாகிறது
  • ஆபாசம் குறித்து பேசியிருக்கும் வீடியோ வைரல்
எது ஆபாசம்? வகுப்பெடுத்த சாய்பல்லவி - வைரலாகும் வீடியோ title=

நடிகை சாய்பல்லவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ’கார்கி’ திரைப்படம் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கும் தொடர்ச்சியாக பிரபலமான யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அதில் தன்னுடைய திரைப்பயணம் மற்றும் தேர்ந்தெடுக்கும் கதைகள், ஆபாசம் உள்ளிட்டவை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். சமூகத்தில் நடக்கும் விஷயங்களில் தனக்கு இருக்கும் பார்வை மற்றும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டிய விஷயங்கள் பற்றியும் தன்னுடைய பார்வைகளை அவர் முன்வைத்துள்ளார்.

மேலும் படிக்க | இயக்குநர் பாலா கொடுத்த பிறந்தநாள் ட்ரீட் - வெளியானது சூர்யா 41 ஃபர்ஸ்ட் லுக்

உடையில் ஆபாசம் என்பது இல்லை எனக் கூறிய அவர், அனைவருக்கும் முன்பு பாரம்பரியமாக அழகாக உடை அணிந்திருப்பவர்கள் நல்லவர்கள், மார்டன் உடையில் இருப்பவர்கள் கெட்டவர்கள் என்ற பொதுப்புத்தியில் தனக்கு உடன்பாடில்லை எனக் கூறியுள்ளார். எனக்கு பிடித்த உடைகளை அணிந்து கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை எனக் கூறியுள்ள சாய்பல்லவி, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை மனதில் வைத்து உடையை தேர்வு செய்ய மாட்டேன் என கூறியுள்ளார். 

"என்னுடைய குழந்தைக்கு என்ன பிடிக்கிறதோ?, அதாவது எந்தமாதிரியான உடைகளை அவர்கள் அணிந்து கொள்ள விரும்பினாலும் அதற்கு முழு சுதந்திரம் கொடுப்பேன். உடம்பு என்பது உடை மாதிரி, அதை ஏதாவது யாரேனும் செய்தால் அதனை மனதில் எடுத்துக் கொண்டு உன்னைக் காயப்படுத்திக் கொள்ளாதே என்றும் சொல்லிக் கொடுப்பேன். பாலியல் தொல்லைகளுக்கு உடைந்து போகக்கூடாது. மனமும், உயிரும் தான் எல்லாமே, அதைத் தவிர்த்து மற்றது எல்லாமே சாதாரணமானது" என கூறிவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | விக்னேஷ் சிவன் - நயன்தாராவை சந்தித்த பாலிவுட் பிரபலம் - வைரலாகும் புகைப்படம்

மேலும், மாதவிடாய் காலத்தில் தான் பெரும்பாலும் நடனமாடியிருக்கிறேன் எனக் கூறியிருக்கும் அவர், ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடியது கூட அப்படியான நேரத்தில்தான் எனத் தெரிவித்துள்ளார். சாய்பல்லவியின் இந்த வெளிப்படையான கருத்துகளுக்கு இணையத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமூகத்துக்கு தேவையான முக்கியமான கருத்துகளை சாய்பல்லவி வெளிப்படையாக பேசியிருப்பதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News