மீண்டும் பிரபல நடிகருக்கு வில்லனாகும் அருண் விஜய்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தில் அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jun 11, 2022, 09:26 AM IST
  • வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படம் நல்ல வரவேற்பை பெற்றது.
  • அடுத்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் இணையவிருக்கிறார்.
  • இப்படத்தில் அருண் விஜய் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
மீண்டும் பிரபல நடிகருக்கு வில்லனாகும் அருண் விஜய்? title=

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவரும் படங்கள் பெரும்பாலும் ரசிகர்களை கவரும் விதமாக அமையும்.  இவரது சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹிட்டான 'மாநாடு' படம் நல்ல வரவேற்பை பெற்றது.  சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கல்யானை ப்ரியதர்ஷன், கருணாகரன் போன்ற பலர் நடித்திருந்த இந்த படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியிலும் வெற்றிபெற்றது.  இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான அடல்ட் காமெடி திரைப்படமான 'மன்மத லீலை' இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  

மேலும் படிக்க | திருப்பதி கோவில் சர்ச்சை! மன்னிப்பு கோரி விக்னேஷ் சிவன் கடிதம்!

இதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இருமொழி திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார், அதில் இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் இணையவிருக்கிறார்.  தற்போது இப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் திரையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.  இந்த படத்தில் மிக பிரபலமான பெரிய நடிகர்கள் நடிக்கமாட்டார்கள் ஆனால் நல்ல திறமையான நடிகர்கள் நடிப்பார்கள் என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.  மேலும் இப்படத்தின் தொழில்நுட்ப குழுவினர் பெரிய அளவில் பேசப்படுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு வில்லனாக அருண் விஜய் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த படத்தின் ஸ்க்ரிப்ட் அருண் விஜய்க்கு பிடித்துப்போய்விட்டதால் படத்தில் நடிக்க உடனடியாக ஒப்புதல் தெரிவித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தில் அருண்விஜய் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார், இவரது வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவவேற்பை பெற்றது.  தற்போது அருண் விஜய் 'யானை' படத்தில் நடித்து முடித்து இப்படத்தின் வெளியீட்டிற்காக காத்துகொண்டு இருக்கிறார்.  அதேசமயம் இந்த படத்தில் அவர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை என்றும் சில செய்தி வட்டாரங்கள் கூறுகிறது.

மேலும் படிக்க | சிவகார்த்திகேயன் படத்தை வெளியிடும் பிரபல பைனான்சியர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News