22 ஆண்டுகளுக்கு பின்னர் ஒன்றினையும் சூப்பர் ஸ்டார்ஸ்!

22 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் பிரபு மற்றும் மலையாள சூப்பர் ஸ்டால் மோகன் லால் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Jun 19, 2018, 04:48 PM IST
22 ஆண்டுகளுக்கு பின்னர் ஒன்றினையும் சூப்பர் ஸ்டார்ஸ்! title=

22 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் பிரபு மற்றும் மலையாள சூப்பர் ஸ்டால் மோகன் லால் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

22 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1996-ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பிரயதர்ஷன் இயக்கத்தில் நடிகர் பிரபு மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் சிறைச்சாலை. இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

`ஒடியன்', `காயங்குளம் கொச்சுன்னி' படஞ்களுக்குப் பிறகு மோகன் லால் தற்போது `லூசிஃபர்' என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் ப்ரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். 

தற்போது மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பரபரப்பில் இருக்கும் மோகன் லால், இந்த வேலைகள் முடிந்த பின்னர் `லூசிஃபர்' பட வேலைகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பின்னர் பிரபுவுடன் இணைந்து மரக்கார்: அரபிக்கடலின்டி சிம்ஹம் படத்தில் நடிக்கவுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகவுள்ள இத்திரைப்படமானது வரலாற்றுத் திரைப்படமாக உறுவாகவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News