பிரபல நடிகர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல்..! நடந்தது என்ன..?

Mohan Sharma: நடிகர் மோகன் ஷர்மா மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Sep 30, 2023, 10:16 AM IST
  • தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர், மோகன் ஷர்மா.
  • இவரை மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர்.
  • இதற்கு காரணம் என்ன?
பிரபல நடிகர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல்..! நடந்தது என்ன..? title=

தமிழ் திரைப்பட உலகின் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர், மோகன் ஷர்மா. சில படங்களில் இயக்குநராகவும் எழுத்தாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 

மோகன் ஷர்மா:

கோலிவுட்டில் 80களில் வெளிவந்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், மோகன் ஷர்மா. மலையாள திரையுலகில் இருந்து வந்திருந்தாலும் தமிழில் ஹிட்டான பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார்.  சுமார் 20 வருடங்களாக தமிழ் சீரியல்களில் இவர் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வருகிறார். தேவையானி நடிப்பில் 2004ஆம் ஆண்டு ஒளிபரப்பான கோலங்கள் தொடரின் முக்கிய கேரக்டர்களுள் இவரும் ஒருவர். சன் டிவி தொடர்களில் தொடர்ந்து முகம் காண்பித்து வரும் இவர், கடைசியாக தாலாட்டு தொடரில் நடித்து இருந்தார். பிரபல நடிகை லக்ஷமியின் முன்னாள் கணவர் இவர். 

மேலும் படிக்க | தமிழ்நாட்டின் டாப் 5 டிவி தொடர்கள்! எதிர்நீச்சல் சீரியலுக்கு எந்த இடம்?

மர்ம நபர்கள் தாக்குதல்:

நடிகர் மோகன் ஷர்மா, தற்போது சென்னையில் உள்ள சேத்துப்பட்டில் உள்ள ஹாரிங்டன் ரோட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர், நேற்று முன் தினம் இரவு, தி.நகரில் இருந்து தனது வீட்டிற்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஹாரிங்க்டன் ரோடு 10ஆவது அவென்யூ அருகே கார் வந்து கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் சிலர் இவர் காரை வழி மறித்துள்ளனர். அவர்கள், மோகன் ஷர்மா காரை விட்டு இரங்கியவுடன் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் வெறிகொண்டு தாக்கியதால், மோகன் ஷர்மாவிற்கு கண், கால்கள் ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுளன. அதன் பிறகு இவர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  மோகன் ஷர்மா, மூக்கில் கட்டு போட்டிருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

காரணம் என்ன?

நடிகர் மோகன் ஷர்மா, தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். மோகன் ஷர்மாவிற்கு சொந்தமாக போயஸ் கார்டனின் ஒரு வீடு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வீட்டை இவர் கடந்த ஆண்டு தனியார் நிறுவனம் மூலம் ராஜா ரமணன் என்ற மருத்துவருக்கு விற்பனை செய்துள்ளார். சேகரன் மற்றும் அவரது மகன் கிருஷ்ணகுமார் ஆகியோர் இடைத்தரகர்களாக இருந்து இந்த வீட்டை விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து, வீட்டை விற்ற நாள் முதல் அதை விற்ற இடைத்தரகர்கள் இருவரும் வீட்டிற்குள் புகுந்து அத்துமீறி வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மீது மோகன் ஷர்மா முன் கூட்டியே புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரால் நடிகருக்கும் இடைத்தரகர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன் விரோதம் காரணமாகத்தான் தற்போது இந்த தாக்குதல் நடந்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார், மோகன் ஷர்மா. போலீஸார் தாக்குதல் நடந்த இடத்தில் பதிவாகப்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | மகளுடன் பட ப்ரமோஷனில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News